Sunday 25 September 2011

ரசிகன்.....!



ரசிகனே!
ரசனை-
 உள்ளவனே!

மனுசனுக்கும் -
மத்ததுக்கும்
மாறுபாடு-
ரசனை தானே!

ரசிப்பது -
தப்பில்ல -!
ரசிப்பது மட்டுமே -
வாழ்கை -
இல்ல!

பாலூட்டியவளுக்கு -
சோறு இல்ல!

புள்ளைக்கு -
பாலில்ல!

கட் -வுட்டுக்கு-
 பால் ஊத்துரவனே-
உனக்கு வெட்கமா -
இல்ல!

நிழல் -
நாயகனுக்கு -
இழக்கனுமா -
நிஜ வாழ்கையை!?

நடிகர் -
யாரும் சொல்லல-
நீ சாவு -
நான் வாழ-என!

அப்படி எவனும் 
சொல்லியிருந்தா -
அவன் மனுசனே -
இல்ல!

சினிமாவில் -
போராடி சேர்த்து -
வைப்பார் -
காதலை!

வீட்டில் -
போட்டு அடிப்பார் -
காதல் செய்த -
மகளை!

மொழி ,மொழி -என
வசனம் பேசுவார் -
திரை படத்தில்!

மொழி பெயர்ப்பு செய்து -
பணம் சம்பாதிப்பார்-
இன்னொரு-
மாநிலத்தில்!

ஒரு படம் ஓட-
ஆயிரம் கைகள் -
உழைப்பு
தேவை!

ஆயிரம் கைகளை-
 மறந்துட்டு -
ஒருவரை மட்டும் -
கொண்டாடுவது -
தேவையா!?

எங்கேயும் -
இல்லாத -
அசிங்கம்!

தலைவனை -
நாம -
தேடுற இடம் -
திரை அரங்கம்!

வந்தாரை -
வாழ வைக்கும் -
தமிழகம்!

வாழ வைப்பது -
போதாதா!?-
ஆளவும் -
வைக்கணுமா!?

செத்தாதான் -
பாலூத்துவாங்க-
பலூத்த போயி -
கீழே விழுந்து -
சாவுறானுங்க!

நடிப்பது -
அவர்களது -
பொழப்புக்கு!

உன் -
பொழப்ப பாரு -
அடுத்த-
வேலை-
 சோத்துக்கு!

நடிப்பு வேறு-
உண்மை-
நடப்பு வேறு!

காமராசரும் -
காயித மில்லதும் -
தலைவர்கள் -
கிடைக்கலையா!?

அவர்கள் -
கிடைத்தது எங்கே-?
திரை துறையா!?

நடந்ததுக்கு -
வருந்துவோம் !
இனி-
நடப்பதுக்கு -
திருந்துவோம்!!

No comments:

Post a Comment