Saturday 24 December 2011

இது நியாயமா!?


அரசு அனுமதி பெற்ற-
''இடம்'' தான்!

படித்த என் மகன்-
அங்கு வேலைக்கு-
போவது பிடிக்கவில்லை-
எனக்கு தான்!

என்னை தான் -
இந்த ஊர் -
தூற்றியது -
''சாராய -
வியாபாரி''-என!

என் மகனையும்-
தூற்றனுமா!?-
"தண்ணி " விக்கிறவன்-
என!

நான்-
காய்ச்சி -
வித்த போது!-
துரத்தி பிடித்த -
காவல் துறை!

தெரு தெருவுக்கு-
''மது 'விக்க மட்டும் -
அனுமதித்தது-
என்ன-
முறை!?

''குடிசை தொழில்''-
செய்த-
எனக்கு லத்தி அடி-
கிடைச்சது!

''கட்டடத்துல ''-
தொழில் செய்றவங்களுக்கு- மரியாதை
கிடைக்குது!

''சில்லறை'' வியாபாரத்துக்கு -
தடையாம்!?

''மொத்த வியாபாரத்துக்கு-''-
அனுமதியாம்!?

இது என்ன !?-
கொடுமைங்கய்யா!?

விஷ சாராயத்தால்-
பலர் சாவாம்!

இங்க்லீஷ் பேர் -
வச்சத குடிச்சா-
ஆரோக்கியமா!?

''சாராய விக்கிரியே''-
உனக்கு வெட்கம் இல்ல-
என -கேட்ட -
ஊர் பெருசுகளே!

இப்ப -
டெண்டர் எடுக்க -
வரிசை கட்டி-
 நிக்கிறீங்களே-
உங்களுக்கு -
அறிவு இல்ல!?

நான் திருந்திட்டேன்!
தொழிலை விட்டுட்டேன்!

அயோக்கிய தொழிலை -
விட்டுட்டேன்!
அயோக்கியன் என்கிற பேர்-
என்னை இன்னும் விடல!

சொல்லுங்க நீங்களே!

யோக்கியனு பேர்ல-
''பார்''நடத்துறவங்கள-
என்னனு -
-சொல்ல!?

2 comments:

  1. //நான்-
    காய்ச்சி -
    வித்த போது!-
    துரத்தி பிடித்த -
    காவல் துறை!

    தெரு தெருவுக்கு-
    ''மது 'விக்க மட்டும் -
    அனுமதித்தது-என்ன
    முறை!?//

    இது சரியான நெத்தி அடி- இல்ல இல்ல
    போலீசுக்கே கொடுத்த லத்தி அடி

    ReplyDelete
  2. கடுகு சிறுத்தாலும் -
    காரம் குறையாது!

    அதிக வார்த்தை எழுதுவதை ,
    ஒத்த வரியில ,
    மொத்தவரியையும்,
    முழுங்கி விடுகிறது!
    உங்கள் விமர்சனம் !
    அசரத்!

    உங்களுடைய கருத்து .
    என்னை திருத்தும் -
    என்று நம்புகிறேன்!

    இன்னும் உங்களிடம்,
    கருத்துகளை எதிர்பாக்கிறேன்!

    ReplyDelete