Friday 8 February 2013

ஹபீப்-குர்சியத்(10)

காலம்-
விடுகதையானது!

பதிலையும்-
சுமந்தே வருவது!

ஒன்றாக-
படிக்கும்போது-
தெரியவில்லை!

பார்க்கும்போதும் கூட-
அறிந்திட முடிவதில்லை!

யார்-
யாருக்கு-
வாழ்கைதுணை-
என்றும்!

வாழ்கையின்-
துரோகிஎன்றும்!

தோள் தட்டுபவர்-
யாரென்றும்!

தோலை உரிக்க-
வருபவன் யாரென்றும்!

காலம்-
செல்ல செல்ல-!

சொல்லிசெல்கிறது-
பதில்களை!

ஹபீபுக்கும்-
கல்யாண பேச்சி!

காற்றுவாக்கிலே-
எனக்கும்-
வந்துச்சி!

ஒரு தரம்-
ஹபீப் வந்தான்!

என்னிடம்-
சொன்னான்!

ஹபீப்;
"மாப்ள !போன்-
பண்ணினேன்-
"அது"க்குடா..!!

நான்;
"எது"க்குடா..!!

அவன்-
குர்சியதுக்குடா...!!

கூர்ந்து-
பார்த்தேன்!

ஹபீபே-
தொடர்ந்தான்!
"எல்லாத்தையும்-"
முன்னேயே சொல்லனும்னு-
நினைச்சேன்-
அதனாலதான்-"
என்றான்!

நான்-
தேவையா இது...!
என்றேன்!

ஹபீப்-
என்னை பற்றி-
பின்னால சொன்னால்-
பிரச்னை-
இப்பவே சொல்லிட்டா....!?
என்றான்!

சரியா !?-
தப்பா..!?-
விவாதிக்கவில்லை!

ஊரெல்லாம்-
தொலைபேசி குருக்கிடானது-(க்ராஸ்)
அவன் அறிந்திருக்கவில்லை!

வெறும் வாயை -
மென்றவர்களுக்கு-
"அவல்"-கிடைத்தது போல்-
இவர்கள் செய்தி-
அவர்களுக்கு!

(நினைவுகள் சுழலும்....)

//"அவல்" என்பது-
ஒரு நொறுக்குதீனி.
தேங்காய் சில்லுடன் சேர்த்து-
சாப்பிடலாம்//






No comments:

Post a Comment