Tuesday 26 February 2013

வழக்கு எண்....!

குடிதண்ணீராக-
இருந்த கூவம்-
நாற்றத்திற்கு-
பெயர் போனது போல!

மென்மைக்கு-
பெயரான-
மல்லிகை-
யானைகாளில்-
மிதிபட்டு-
நசுங்குவது போல!

நன்னீரான-
நதி நீர்-
கடலில் கலப்பதால்-
உப்பு நீராவது போல!

ஒருவன்-
சிட்டாக-
பறக்கவேண்டிய-
பருவம்!

சிறகை ஒடித்து-
சிறையில்-
அடைக்கப்பட்ட-
கொடூரம்!

பஞ்சமில்லாமல்-
டெல்லி சுற்றுவட்டாரங்களில்-
குண்டு வெடிப்புகள்!

வஞ்சகமில்லாமல்-
தொடுக்கப்பட்ட-
வழக்குகள்!

குற்றவாளி-
அவன்தான்!

சாட்சியும்-
அவன்-
மட்டும்தான்!

மொத்தம்-
தொடுக்கப்பட்ட-
குண்டு வெடிப்பு-
வழக்குகள்-
பதினேழு!

இவன் சிறையில்-
கழித்த வருடங்கள்-
பதினான்கு!

நீதி மன்றம்-
தீர்ப்பு -
வந்தது-
இவ்வாறாக!

உறுதியாக்கப்பட்டது-
அத்தனை-
வழக்குகளும்-
பொய் வழக்காக!

நம்மில்-
எத்தனை பேருக்கு-
தெரியும்-
அவரின் பெயர்-
முஹம்மது அமீர்கான் -
என்று!

அந்த அப்பாவி-
வெளிவந்ததுகூட-
எத்தனை பேர்-
அறிவோம்-
இன்று!

சுமத்தப்பட்ட-
பழிகள்தான்-
அமீரின் மேல் இருந்து-
விலகிடுமா!?

இழந்த காலங்கள்தான்-
அவருக்கு-
கிடைத்திடுமா!?

ஒரு சமூகத்தில்-
பிறந்தது-
அவ்வளவு-
 பெரிய குற்றமா!?

அதற்காக-
இவ்வளவு-
குரூரமா!?

இன்னும்-
இன்னும்-
எத்தனை-
எத்தனை-
அமீர்களோ!?

சிறைகம்பிகளுக்கு-
பின்னால்-
இருக்கிறார்களோ...!!?

// பொய் வழக்குகளில் இருந்து இருந்து விடுவிக்கப்பட்ட-
பதினாறு வழக்குகளின் விபரம் மட்டும் வெளியிட்டுள்ளார்கள்!
இதில் ஒன்றுதான் அமீர்கான் வழக்காகும்.தொகுத்தவர்கள்-
டெல்லியில் உள்ள ஆசிரியர் குழுமம்(Jamia Teachers' Solidarity Association)
புத்தகத்தின் பெயர்.Framed,Damned,Acquitted;
தமிழில் எழுதிய ரியாஸ் அவர்களுக்கு நன்றி!//


10 comments:

  1. Replies
    1. arunaa sako..!

      ungal katuthirkku mikka
      nantri!

      Delete
  2. எத்தனை-
    எத்தனை-
    அமீர்களோ!?

    ReplyDelete
  3. நியாயமான கோபம் தெறிக்கும் வரிகள்! யாரோ செய்யும் தவறுக்கு அப்பாவிகள் பலியாவது தவிர்க்கப்பட வேண்டும்!

    ReplyDelete