Friday 22 March 2013

கண்ணியமா!? கலங்கமா!? (1)

குனிந்தாலும்-
போச்சி!

குளிச்சாலும்-
போச்சி!

சேலை கொஞ்சம்-
சோர்ந்தாலும்-
போச்சி!

சோலைகளில்-
கொஞ்சம்-
அசந்தாலும்-
போச்சி!

தாய்மையுடன்-
பாலூட்டும்-
தாயை கூட-
ஆபாச படம் எடுக்கும்-
நாய்ங்க வாழுது-
இங்கே!

மானத்தோட-
வாழ நினைக்கும்-
பெண்களையும்-
ஆடை குறைப்பது-
பெண் சுதந்திரம்-என்பது
என்ன முறைங்க!?

காசுக்காக-
"காட்சிபொருளான-"
"கர்மாந்திரங்களை"-
சொல்வதற்கு ஒன்னும்-
இல்லை!

கண்ணியமாக-
வாழ என்னும்-
யோக்கியமானவங்களை-
அடக்கு முறை -என்பதுதான்
இருக்கிறது-
பிடரியில் அடித்தாற்போல!

"திறந்து"கொண்டு-
அலைவது-
சுதந்திரமா!?

ஒழுக்கமா-
உடை அணிந்தால்-
பழமை வாதமா!?

முழுக்க ஆடை-
அணிந்தால்-
தவறுகள்-
நடக்காதா!?-
கேள்வி கேட்குறாங்க!

நகைகளை-
வீட்டுல பூட்டி-
வைக்கிறாங்க-
களவு போறதில்லையாங்க!?

அதனால -
நகைகளை தெருவிலா-
வீசிட்டு போறாங்க!?

ஆடை என்பது-
கண்ணியமுங்க!

கண்டபடி-
"காட்டுன-"
கட்டினா-
என்ன சொல்ல-
சொல்றீங்க!?

சந்நியாசிகள்-
கன்னியாஸ்திரிகள்-
முழு ஆடைதான்-
அணியிறாங்க!

அவர்களை பார்த்தால்-
நமக்கு மரியாதை-
வருதுதானேங்க!?

சாமானிய பெண்கள்-
அணிந்தால்-
ஏன் அடிமைத்தனம் -
என்கிறாங்க!?

நோபல் பரிசு பெற்ற-
கார்மன் என்கிற-
முஸ்லிம் பெண்மணி!-
கேள்வி கேட்கபட்டார்!

பர்தா அணிவது-
பழமைவாதமா-
தெரியலையா!?-என்ற
கேள்வியை -
நிருபர் முன்வைத்தார்!

பழங்கால மனிதன்-
நிர்வாணமாக -
அலைந்தார்கள்-
நாகரீகம் -
வந்தபோதுதான்-
ஆடை அணிந்தார்கள்!-என
பொட்டில் அறைந்ததுபோல்-
சொன்னார்!

(தொடரும்....!)





3 comments:

  1. நல்ல பதில்...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_23.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  2. // நகைகளை-
    வீட்டுல பூட்டி-
    வைக்கிறாங்க-
    களவு போறதில்லையாங்க!?
    // நல்ல கேள்வி

    ReplyDelete
  3. அருமை! நல்ல கேள்வி நல்ல பதில்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete