Sunday 3 March 2013

பேதையும்......!!??

படித்துள்ளேன்-
"கேட்டும் உள்ளேன்"-
கவிதை வரிகளில்!

போதைகள் தரும்-என
பேதை அழகில் -மயங்கியவர்களின்-
எழுத்துகளில்!

இன்றோ-
வேதனையே -
மிஞ்சுகிறது-
"போதையாக" அலையும்-
பெண்களையும்-
 காணுகையில்!

இதுதான்-
நாகரீகமா !?

இல்லை-
கேவலமா!?

கர்மம் என்றால்-
இவ்வுலகம்-
ஏற்குமா!?

ஆனால்-
குடிக்கும் ஆண்கள்-
குடும்பம் எனும்-
பூந்தோட்டதின்மேல்-
எரி திராவகம்(ஆசிட்)-
தெளிக்கிறார்கள்!

குடிக்கும் பெண்களோ-
பூச்செடிகளின்-
வேர்களில் -
ஊற்றுகிறார்கள்!

வீடுகளை-
நாசபடுத்தி விட்டு-
நாட்டின் -
"சாதனை விற்பனை"-
என்கிறார்கள்-
ஆள்பவர்கள்..!!!!


6 comments:

  1. கொடுமையிலும் கொடுமை...

    நண்பரின் தளத்தையும் நேரம் கிடைப்பின் வாசிக்கவும் :

    http://nadikavithai.blogspot.in/2013/03/33.html

    ReplyDelete
  2. மேல்நாட்டு கலாச்சாரம் இங்கேயும் பரவி வருவது கொடுமையிலும் கொடுமை.காலெஜ் பொண்ணுகள் சிகரெட் பிடித்த படி தெருவில் நடக்கும் பொழுது இழுத்து நான்கு சாத்து சாத்த வேண்டும் போல் இருக்கின்றது,

    ReplyDelete
    Replies
    1. saadiqa sako..!

      varavirkku mikka nantri!

      Delete
  3. நாகரீகம் என்கிற பெயரில்
    விலங்குகளாக மாறிவரும்
    மனித இனம் பற்றிய
    முத்தாய்ப்பான கவிதை நண்பரே...

    ReplyDelete