Sunday 31 March 2013

நாம நம்பனுமாங்க.....!!!?

 இந்தியா -
ஒளிர்கிறதுன்னு-
பிரச்சாரம்-
பண்ணுனீங்க!

நீங்கதான்-
ஆட்சியில-
இல்லாம-
ஒளிஞ்சி -
போனீங்க..!!

சேது திட்டத்திற்கு-
பாதையை தேர்வு-
செஞ்சதே-
நீங்க!

ஆட்சி-
காலாவாதியானதும்-
ராமர் பாலம்னு-
சொல்றீங்க!

எல்லைதாண்டிய -
பயங்கரவாதம்னு-
வாய் கிழிய -
பேசுவீங்க!

எல்லைக்குள்ள-
மத கலவரத்தை-
தூண்டுவீங்க!

பெட்ரோல்-
டீசல் -
உரிமையை-
தனியாருக்கு-
கொடுத்தது-
நீங்க!

இப்போ-
விலை உயர்வுன்னு-
போராடுறீங்க!

உங்க தேசபக்தி-
புல்லரிக்க-
வைக்குதுங்க...!!!!!?

நடந்திருக்கு-
சாதிக்கலவரம்-
மதகலவரம்!

தவறாமல்-
நடந்தேறி இருக்கு-
கற்பழிப்புகளும்!

குஜராத்ல-
கற்பழிக்கப்பட்ட-
கணக்குதான்-
எவ்வளவுங்க!?

நாம என்ன -
சொல்லங்க!?

அவுகளே-
ஆசிஷ் கிட்ட-
சொன்னதுதான்-
தெரியுந்தானேங்க!

இதுல-
அம்மாநில-
முதல்வருக்கு-
தொடர்பு இல்லைங்குறாங்க!

சரி !
அப்படி -
வைத்து கொள்ளுவோம்ங்க!

தன் மாநில-
மக்களையே-
காப்பாற்ற-
முடியாதவருங்க!

பிரமதராகி-
என்ன பண்ணிட-
போறாருங்க!?

மதசார்பற்ற-
கட்சியினு-
சொல்லி -
ஆளும் கட்சியாலேயே-
ஒன்னும் மாறலேங்க!!

கர்நாடக-
சட்டசபையிலேயே-
நீலப்படம்-
பார்த்தீங்க!!

தற்போது-
பலான காட்சியில-
சட்டமன்ற உறுப்பினர்-
அசத்துராருங்க!

ஆனாலும்-
நீங்க-
"கலாசார காவலர்னு-"
சொல்லுவீங்க!

அதையும்-
நாங்க-
நம்பனும்-
ஏங்க....!!!!!!!!!??

// ஆசிஷ் கேதான் எனும் நிருபர் ரகசிய கேமராமூலம் பல உண்மைகளை அவர்களின் வாயாலேயே சொல்லி பெரும் பரபரப்பை உருவாக்கியது.
தெகல்கா பத்திரிகை நிருபர் அவர்/

1 comment: