Sunday 2 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (17)

''ஆம் !
அரசே!

உங்களை -
''காணாமல்'' போக-
வைக்கவே!

காத்திருந்திருக்கிறார்கள்-
நேற்றிரவே!


மேலும் ஒரு-
பாழான விசயம்!

நடந்துள்ளது-
பலான விசயம்!

அனுசரிப்பவர்களுக்கு-
சன்மானம்!

முரண்டு பிடித்தால்-
''திரும்பாத'' பயணம்!

சொல்லி முடித்தார்!
தளபதியார்!

''பெண் விவகாரம்-
நடந்திருக்காது-என
தலையாட்டினார்-
மன்னர்!

''நடந்துள்ளது''-
இது-
சேதுபத்திரர்!

''காணாமல் போன-
பெண்கள்!

ஓடி போனதாக-
சொல்லபட்டார்கள்!

கடற்கரைதனில்-
பிணமாகவும் கிடந்தார்கள்!

கேள்விகள் மட்டும்-
சுமந்திருந்தார்கள்!

இன்று-
''விடைகளானார்கள்''!

சொல்லி முடித்தார்-
சேதுபத்திரர்!

சிங்கராயர் கூட-
ஆமோதித்தார்!

பெரு மூச்சொன்றை-
மன்னர்-
வெளிபடுத்தினார்!

''எலிக்கு''-
மன்னிக்கவும்-
புலிக்கு கூண்டு வைக்க-
முடிவெடுத்தார்!

பகல்-
இரவை நோக்கி பயணித்தது!

மன்னர் அழைப்பு-
ராஜ குரு காதிற்கு-
சென்றது!

அரண்மனையில்-
சந்திப்பு!

''தனியாக பேச வேண்டுமென-
சேதுபத்திரரை-
ராஜ குரு அவமதிப்பு!

''இருக்கட்டும்''-என
மன்னர்-
தற்காப்பு!

ராஜ குரு-
''அரசே!
இவர்களால் உங்களுக்கு ஆபத்து!''

இதை கேட்ட-
சேதுபத்திரர் சினம் கொண்டார்!

''தேசத்தை-
சீரழிப்பது நீ!

இளம் மங்கையரை-
சீரழிப்பதும் நீ!''

தொடர்ந்தது-
வசை சொற்கள்!

சிவந்தது-
ராஜ குருவின் கண்கள்!

மன்னரிடம்-
சேதுபத்திரரை கைது செய்திட-
உத்திரவிட்டார்!

இல்லையென்றால்-
வெளி நடப்பு-என
நடந்தார்!

மன்னரின் சிரிப்பு-
ராஜ குருவை நிறுத்தியது!

அச்சிரிப்பினில்-
தீர்ப்பு இருந்தது!

(தொடரும்....!!)

3 comments:

  1. நல்ல தீர்ப்பாக இருக்கட்டும்...

    ReplyDelete
  2. அதானே..நல்ல தீர்ப்பாகத் தானே இருக்கவேண்டும்..

    ReplyDelete
  3. தீர்ப்பு நல்லதாக இருக்குமென நம்புகிறேன்.

    ReplyDelete