Monday 10 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (25)

மன்னர்-
எழுந்தார்!

தொடர்ந்தார்!

''அருமை பிரதானிகளே!

வந்திருப்பது-
நீங்கள் அறிந்த-
முன்னால் மன்னர் அவர்களே!

தன்னிலை விளக்கம்-
சொல்லிடவுள்ளார்!-
சந்தேகங்களை தீர்க்கலாம் -
நீங்களே!''

மார்த்தாண்ட வர்மர்-
எழுந்தார்!

அமைச்சரவைக்கு-
புன்னகை பூத்தார்!

'மன்னராக -
நான் வீற்றிருந்தபோது!

இன்றைய -
பல அமைச்சர்கள் பதவி வகித்தீர்கள்-
அப்போது!

அன்று-
நான் படைதளபதியாக-
இருந்தவன்!

நள்ளிரவில்-
ராஜ குரு சந்திக்க வந்ததால்-
அதிர்ந்தவன்!

இரண்டாம் மன்னர்-
தவத்திற்கு சென்றவர்!

தவத்தில் திளைத்து-
மாயமானார்!

இதனை -
ராஜ குரு சொன்னார்-
என்னிடம்!

இச்செய்தியினை-
நான் சொன்னேன்-
சேதுபத்திரரிடம்!

ஆட்சி -
கைமாறக்கூடிய சூழல்!

இன்றைய -
மன்னர் பிரானோ-
அன்றைக்கு ஆன்மீக தேடல்!

நான்-
சம்மதித்தேன்-
ஆட்சி பொறுப்பேற்க!

சேதுபத்திரர்-
வேண்டுகோளுக்கு இணங்க!

காரணமும்-
உள்ளது!

முதலாம் மன்னர்-
தூரத்து உறவு எனும்-
தகுதி என்னிடமிருந்தது!

ஆனால்-
ராஜ குரு-
படைகளுக்குள்ளேயே-
பகையை மூட்டினார்!

மக்களையும்-
எனக்கெதிராக திருப்பினார்!

மூன்றாம் மன்னர்-
''வருகிறார்'' என்பதையறிந்திருந்தால்-
நானே பொறுப்புதனை கொடுத்திருப்பேன்!

ஆனால்-
நாட்டை விட்டு -
ஓடிட ஆளானேன்!

மன்னர் படையை-
எதிர்க்க சொல்லவில்லை-
என் படையை!

அவர்களும்-
சரணடைந்தார்கள்!

நானும்-
கடலோர படையிடம் விளக்கிட-
அரபிகள் அழைத்து வந்தார்கள்''!

சொல்லி முடித்தார்-
மார்த்தாண்ட வர்மர்!

அத்தனை கண்களும்-
சேதுபத்திரரை பார்த்தது!

''உண்மைதான்'' என்பதை-
அவரது தலையசைப்பு உணர்த்தியது!

மன்னர்-
தொடர்ந்தார்!

'' ஆன்மீக தேடலின் போது!

ராஜ குரு சந்திக்க வந்தார்-
ஒரு நாள் பொழுது!

நான் வர மறுத்தேன்!

ராஜ குரு வார்த்தையால்-
வர சம்மதித்தேன்!

''மார்த்தாண்ட வர்மரால்-
மக்கள் தொல்லையென்றார்!

தேவை ஆட்சி மாற்றம்-
என்றார்!

வர சம்மதித்தேன்!

பல உண்மைகளையறிய முடியாமல்-
பாதுகாப்பு என்ற பெயரில்-
சிறைப்பட்டேன்!''

ராஜ துரோகம் செய்த-
ராஜ குருவை என்ன செய்யலாம்..!?-
மன்னர் கேட்டார்!

அறையெங்கும்-
நிசப்தம் நிலவியது!

''கழுவிலேற்றனும்...!!-''என
ஒரு சப்தம் கேட்டது!

சப்தம் வந்த திசையை நோக்கி-
மன்னர் கழுத்து திரும்பியது!

(தொடரும்....!!)






5 comments:

  1. இன்று நடக்கும் அரசியல் சம்பவங்கள்
    என்றும் நடந்திருப்பதை எண்ணி வியக்கிறேன்..
    காலங்கள் தான் மாறுகின்றன..
    காட்சிகள் மாறுவதில்லை போலும்...

    ReplyDelete
  2. அடுத்து...?
    ஆவலுடன்...
    தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. தொடர்கிறேன்! சுவையாக செல்கிறது!

    ReplyDelete
  4. சொன்னது யார்.....

    தெரிந்து கொள்ள நானும் தொடர்கிறேன்...

    ReplyDelete