Sunday 16 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (31)

அத்ஹமே தொடர்ந்தார்!

''எங்களது வாழ்வியல்-
தத்துவங்கள்!

இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களது-
வழிமுறைகள்!

இதனை பின்பற்றுபவர்களே-
இஸ்லாமியர்கள்!

அதில் சில திருமண சட்டங்கள்!

தேவை-
மணம்முடிக்கும்-
ஆண் மற்றும் பெண்ணின் -
முழுசம்மதம்!

இதற்கு-
இருவர் சாட்சியாக இருக்கனும்!

பெண்ணிற்கு-
மணாளனால் 'மகர்''எனும் பணம் கொடுக்கப்படும்''-
இப்படியாக அத்ஹம் -
சொல்லிக்கொண்டிருந்தார்!

''நல்ல விஷயம்தான்...!!''-
மன்னர் இடையே சொன்னார்!

''இன்னொன்று-
இத்தேசத்திற்கு புதிதான ஒன்று!

கணவன் ,மனைவிக்கு இடையே-
பிணக்கு என்றால்!

பேச்சு வார்த்தையினால்-
இணக்கமடையவில்லையென்றால்!

விவாகரத்து செய்துக்கொள்ளலாம்!

கணவர் இறந்துவிட்டால்-
பெண் மறுமணம் செய்யலாம்!''-
அத்ஹம் சொல்லிக்கொண்டிருந்தார்!

''விதவைக்கு மறுமணமா..!?-
கூட்டத்தில் சலசலப்பானது!

''அவளும் மனித ஜென்மம் தானே..!!''
மன்னரின் குரல் தன்னிலையை சொன்னது!

அத்ஹம் தொடர்ந்தார்!

''முஸ்லிமான ஆணையோ,பெண்ணையோ-மணம்முடிக்க விரும்புவோர் முஸ்லிமாதல் வேண்டும்''-
அத்ஹம் சொன்னார்!

''முஸ்லிமாவதற்கு சம்பிரதாயங்கள்-
எங்கே போய் செய்வது..!?-
மன்னர் கேட்டார்!

அத்ஹம் தொடர்ந்தார்!

''எங்கேயும் செல்ல தேவையில்லை!
மனமுவந்த ஏற்றுக்கொள்வதை தவிர வேறில்லை!

அவை;
''வணக்கத்திற்குரியவன் ஒரே இறைவன்!
அவன் உருவமில்லாதவன்!

யாரையும் அவன் பெறவுமில்லை!
யாராலும் அவன் பிறந்தவனுமில்லை!

இறைவனின் தூதர் முஹம்மது நபி (ஸல்) ஆவார்கள்!

இதனையே மனதால் உறுதிப்பூண்டு-
வாய் வழியாய் சொல்லவேண்டியவைகள்'!

''லாஇலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர்ரஸூலுல்லாஹி ''-
இதனையே அரபு மொழியில் சொல்லபடுபவைகள்!

அதன் பிறகு-
வாழ்வியல் நடைமுறைகளை-
பயிற்றுவிக்கபடுவார்கள்!
அத்ஹம் சொல்லி முடித்தார்!

''இவ்வளவு தானா..!?-
இதனை பிரகடனப்படுத்தி-
அத்ஹமை மணமுடிக்க -
என் மகள் தயாராகவுள்ளார்''-
இது சேதுபத்திரர்!

இதனை மொழிந்து-
அப்துல் மஜீது பின் அர்க்கம் ஐ-
என் தங்கையை மணமுடித்துக்கொடுக்க தயாராகவுள்ளேன்-
இது தளபதியார்!

''இனி அரபியர்கள் -
இந்நாட்டின் ''மாப்பிள்ளாக்கள்''-
புன்முறுவலுடன் சொன்னார்-
மன்னர்!

மீனவ சமூக தலைவர்-
எழுந்தார்!

''அரசே!
அரபியர்களின் கொள்கையாலும்!
நன்னடத்தையாலும்!

மீனவ சமூகத்தின் சில பேர்கள்!
மது அருந்துவதை விட்டு விட்டார்கள்!

திருமணம் முடிப்பவர்களையும் தவிர்த்து!
மற்றவர்களும் விருப்பபட்டால் இஸ்லாத்தை ஏற்க அனுமதித்தால் சிறப்பு!

உங்களிடம் அனுமதி வேண்டுகிறேன்!
தலைதாழ்ந்து நிற்கிறேன்!

அத்தலைவர் முடித்தார்!

அரசர்-
குழுமி இருந்தவர்களை பார்த்தார்!

நிசப்தம் நிலவியது!

மன்னர் மனம் ஆழ்ந்து சிந்தித்தது!

முடிவுடன் எழுந்தார்-
மன்னர்!

(தொடரும்...!!)





4 comments:

  1. நல்ல முடிவாய் அமையும் என்று நினைக்கிறேன்! தொடர்கிறேன்!

    ReplyDelete
  2. நல்ல முடிவாகத்தான் இருக்கும்...

    ReplyDelete
  3. நல்ல முடிவாகத்தான் இருந்திருக்க வேண்டுமென நினைக்கிறேன். அடுத்த பதிவில் படிக்கிறேன்.

    ReplyDelete