Wednesday 17 June 2015

கவிதையே..!!(46-50)


46)
கவிநிலவே!

எத்தனையோ கண்கள்
உன்னைக் காண்பதில் 
என்ன அதிசயம் இருக்கிறது..!?

உன் கண்கள் 
என்னைத் தேடுகிறதல்லவா.!?
அதுவல்லவோ பேரதிசயம்..!!
--------------------------------
கவிதையே..!!(47)
------------------
உனது பார்வைகளால்
என்னை உழுதுவிட்டு
புன்னகையை 
விதைத்துச் சென்றதை!

நான்
அறுவடைச் செய்தால்
அது "கவிதையே "!
-------------------------
கவிதையே..!!(48)
-------------------
காதல் கொண்டதையெல்லாம்
கவிதையில் சொல்லும்
நான்!

கவிதையே
உன்மேல் கொண்ட காதலை
எதை வைத்து சொல்வேன் !?
--------------------------------
கவிதையே..!!(49)
------------------
கவிதையோடு வாழும் என்னை
கற்பனையோடு வாழ்வதாகச் சொல்பவர்களிடத்தில்
எப்படி நான் விளங்க வைப்பேன் !?

நான் கொண்டது காதல்தான்
காமம் அல்ல என்பதனை!
------------------------------
கவிதையே..!!(50)
-----------------
என்னுள் புதைந்த நினைவுகளை
நோண்டி எடுத்து!

உனக்குள்தான் புதைக்கிறேன்!

"கவிதையே"!
---------------------------




3 comments:

  1. காதல் கொண்டதையெல்லாம்
    கவிதையில் சொல்லும்
    நான்!

    ஆஹா இதைவிட நான் என்ன சொல்லவிடப்போகிறேன்.

    ReplyDelete
  2. அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete