Thursday 12 April 2018

பெத்தவ..

ஒங்கள பெத்து என்னத்த கண்டேன்
ஒரு பொட்டு நகைய கண்டேனா
ஒரு பவுசி மவுசிய அடைஞ்சேனா
பேதியில போவியளா..
என் வயித்துல வந்து பொறந்தியளே..”என
வார்த்தைகளால்  குத்தி கிழிக்கும் 
இந்த உலகத்தில்தான்.!

பெத்த கடனுக்காக
கஷ்பட்டு நஷ்டப்பட்டு
அடிப்பட்டு மிதிப்பட்டு
காஞ்சிப்போன கருவாடாக ஆனப்போதும்!

எம்மவனுவ கஷ்டப்படுறப்போது
கொடுத்து ஒதவ 
எங்கையில ஒன்னுமில்லையே..”என
எந்தாயைப்போல கலங்கி நிக்கிற
ஆத்மாக்களும் வாழ்கிறார்கள்.”



3 comments:

  1. எல்லா உறவிலும் நல்லவர்களும் , தீயவர்களும் உண்டு

    ReplyDelete
  2. எதையுமே பொதுவாகச் சொல்ல முடிவதில்லை... Exceptions are always there!

    ReplyDelete
  3. தங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் எமது சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete