Friday, 14 September 2012

பேழையினுள் பேதை...

அது ஒரு-
புகை பட-
பேழை!

தன்னுள்-
வைத்திருந்தது-
நிழற்படங்களை!

புரட்டினேன்-
பக்கங்களை!

உருண்டோடி-
மனம் தந்து-
நினைவுகளை!

அன்று-
இன்றைய-
நிலைபாடுகளை!

சில-
உள்ளத்தை-
உரசியது!

பல-
உளியாக-
குத்தியது!

குழந்தை -
பருவங்கள்!
அன்று!

பருவ வயதில்-
இன்று!

"முறை " இருந்தும்-
முறைத்தவர்கள்!

முகம் தெரியாதவர்களும்-
சிரித்து சென்ற-
தருணங்கள்!

பொழிவாக-
இருந்தவர்கள்!

என்ன பொழப்புடா-!
என-
முழிப்பவர்கள்!

வசந்தம்-
தந்தவர்கள்!

வாசலிலே-
நிறுத்தியவர்கள்!

நகை-
 நட்டுடனும்!

நகையா!?
எட்டாகனியாகவும்!

ஏக்கங்களுடன் -
பார்க்கபட்டவர்கள்!

ஏங்குவதே-
வாழ்கையானவர்கள்!

சொந்தம் என-
சொல்லிகொண்டவர்கள்!

"தெரிந்தும்"-
தள்ளி சென்றவர்கள்!

இவன் யாரென்று-
கேட்டவர்கள்!

இன்னாரென்று -
அன்பு மொழி-
பேசியவர்கள்!

பக்கங்கள்-
முடிந்தது!

பரிதவிப்போ-
தொடங்கியது!

சீலா மீன்-
ஆனத்தில்(குழம்பு)-
எண்ணையாக மிதக்கும்-
கொழுப்பை போல!

பக்குவமாய்-
பார்த்து சாப்பிட்டாலும்-
தொண்டைடில் குத்திடும்-
வாள மீன் முள்ளை போல!

பார்த்த -
முகங்களிடையே!

"பாதகத்தி"-
முகமும் இருந்தது-
இடையே!

அனாசிடமாக -
பார்த்து விட்டேன்-
முகங்கள் அத்தனையும்!

அனலில் கிடத்திய-
புழுவாய் துடிக்குமாறு-ஆனது
"பேதையின்" நினைவால்-
என் நிலையும்!!



Tuesday, 11 September 2012

அதற்காக...

சொல்வதுண்டு-
சுவர் இருந்தால்தான்-
சித்திரம் வரையலாம்-
என்று!

கேலி சித்திரம் மூலம்-
தன்னை தானே -
கேவலபடுத்தி கொள்பவர்கள்-
இன்று!

கோடுகள்-
கிழித்து -
கேலி சித்திரம்!

தரங்கெட்ட தனமானதோ-
விசித்திரம்!

ஆயிரம் வரிகள்-
சொல்லிடுவதை!

ஒரு சித்திரம்-
சொல்லிடும்-அதன்
முழு கதையை!

மனதில் எடுக்கும்-
முடிவும்!

கையில் எடுக்கும்-
பேனாவும்!

மற்றவர்களுக்கு-
புத்தி கூர் தீட்டனும்!

இல்லையானால்-
எழுச்சியை-
உண்டாக்கணும்!

அந்த முடிவில்லாதவர்கள்-
ஏன் எழுதணும்!?

தர்க்கம் செய்ய-
வழிகள் இருக்கு!

தன்னிலைபாட்டை-
சொல்லிட -
வாய்ப்பு இருக்கு!

தரம் தாழ்ந்து-
"வரைவதா"!?-
முறை -அதற்க்கு!?

கூட்டு கற்பழிப்பின்போது-
"வேடிக்கை பார்த்தவர்-"
பதவி ஏற்பு விழாவில்-
கலந்து கொண்டதில்-எனக்கு
உடன்பாடில்லை!

கூடன்குள மக்களின்-
அமைதி போராட்டத்தை-
அங்கீகரிக்காமல்-
அடித்து துவைப்பதில்-எனக்கு
உடன்பாடில்லை!

ஓ!
முட்டாளே!-
"அதற்காக"-நீ!
வரைந்த "அசிங்க"-
கேலி சித்திரத்தை-நான்
ஆதரிக்கவில்லை!

நீ!
அசிங்கபடுத்தியது-
பெண்மையின் -
மேன்மையை!

உன்னை போன்ற-
விஷம் கக்குபவர்களிடம்-
எப்படி எதிர்பார்க்கலாம்-
உண்மையை!

எந்த பெண்ணும்-
இவ்வாறு சித்தரிக்கபட்டாலும்-
பதிவிடுவேன்-என்
கோபத்தை!

நீ!-
"செய்தவற்றுக்காக"-உன்
"உறவுகளை"-எழுத்தில்-
கொச்சபடுத்த-
மனம் இடம் தரவில்லை!




Sunday, 9 September 2012

தவிர்ப்போம்.....

தடுக்கலாம்-
கைது செய்யலாம்-
விசாரிக்கலாம்-
தண்டிக்கலாம்-
தப்பிருந்தால்!

எல்லை தாண்டி-
மீன் பிடித்தால்!!

சுடனுமா!?-
துப்பாக்கி உபயோகிக்க-
முடிகிறதா !?-என
சந்தேகம் வந்தால்!!

ஆயுதங்களுடன் -
ஆயுதம் மோதினால்-
போர்க்களம்!

ஆயுதமும்-
வெற்றுடலும் மோதினால்-
அது அழிச்சாட்டியம்!

தண்டிக்க படவேண்டியவர்கள்-
சுட்டவர்கள்!

தாக்கபட்டிருக்க -
கூடாது-
சுற்றுலா வந்தவர்கள்!

கலவர தீ -
மூண்டது-
அணையால!

தீர்வு கண்டிருக்கலாம்-
மாநில அரசுகளால!

அரசுகள் -
அடித்து கொள்ள செய்தது-
மக்களோடு மக்களாக!

"என் உடல் பொருள்-
ஆவியை தமிழுக்கும்-
தமிழருக்கும்-
கொடுப்பது முறையல்லவா!?-என
வரிகளுக்கு வாயசைத்து-
நடிக்கிறார்கள்!

நம்மக்கள் -
துயர் சம்பவங்களின்போது-
என்ன பண்ணி -
கிழித்தார்கள்!

தப்பு -
"அவர்களின் "மீதா!?

"அவர்கள்" படங்களுக்கு-
அடித்து கொள்ளும்
அசிங்கங்களின் மீதா!?

ஓ!
"வேஷதாரிகளே-"
தர வேண்டாம்-
பிச்சை எடுத்து!

கொடுக்கலாமே-
மிச்சம் உள்ளத்தில்-
பிச்சி எடுத்து!!

கேரளாவில் உள்ள-
முஹம்மது குட்டிக்கு-(மம்முட்டி)
கசிந்திருக்கிறது-
இரக்கம்!

சென்னையில -
இருப்பவங்களுக்கு-
"மரத்து" போனதோ-
அசிங்கம்!

ஒருத்தனின் தவறு-
ஒரு இனத்தையே-
சாடலாகாது!

கொஞ்சம் நடுநிலையாக-
சிந்திப்பதே-
பகுத்தறிவானது!

இத்தைகைய சம்பவங்கள்-
சில வற்றை-
உணர்த்தி போனது!

ஆம்-
விஷத்திலும்-
மருந்துண்டு!

தேனிலும்-
விஷமுண்டு!

வளர்ப்போம்-
தொலை நோக்கு-
பார்வையை!

தவிர்ப்போம்-
குறுகிய மனப்பான்மையை!




Friday, 7 September 2012

நரகாசுரன்....

பட்டாசு ஆலை!
பஸ்பமாக்கியது-
பல உயிர்களை!

கரு மருந்து-
கிடங்கு அது!
கருமாதி-
நடத்தி விட்டது!

பட்டாசு வெடித்து-
தீபாவளி-
கொண்டாட்டம்!

தீபாராதனை-
செய்து விட்டது-
பட்டாசுகள்-
வெடித்து!

ஒரு முறை நடந்தால்-
அடக்கலாம்-
விபத்து என்று-
பெயருக்குள்!

தொடர்ந்து -
நடக்கிறதே-
இது சாட்சியம்-
கூறுகிறது-
"உரிமையாளனின்-"
பொடுபோக்கிற்கு!

கேட்க முடிகிறது-
நிவாரண உதவி-
அறிவிப்பை!

பணம்-
நிவர்த்தி செய்யுமா-
அவர்களின் "இழப்பை!?"

சென்று இருப்பார்கள்-
வேலைக்கு!

பிள்ளைகளின்-
படிப்பிற்கு!

தீபாவளி-
உடுப்பு-
எடுப்பதற்கு!

ஐயோ..!!-
சேர்ந்து விட்டார்கள்-
சுமையாக-
"பாடைக்கு"!!

பட்டாசு ஆலைக்கே-
நம் மக்களின்-
உயிரை காப்பாற்ற-
முடியலியே!

கூடங்குளம்-
நினைத்தாலே-
நடுங்குகிறது-
ஈர குலையே!

போபால் விஷ வாயு-
கசிவுக்கு காரணமானவர்கள்!

கால் நூற்றாண்டு-
ஆகியும் -
இழப்பீடு கூட-
கொடுக்காதவர்கள்!

சிவகாசி -
மக்களை எரியவிட்டவனுங்க!

"தப்பிக்க"-
வழி வகை-
செய்யாதவனுங்க!

அஸ்ஸாமில் -
அலற அலற-
அப்பாவிகளை-
அடித்து உதைத்தவனுங்க!

சுத்தும் பூமியை-
ரத்த பூமியாக்குபவனுங்க!

நரகாசுரன்-
கொடுங்கோலன்னு-
சொல்றாங்க!

அப்பாவிகளின் -
துச்சமென நினைக்கும்-
இவனுங்களை-
என்னனு-
சொல்றதுங்க.....!!?



Wednesday, 5 September 2012

ஸ்தம்பித்தவன்......

நாட்ல-
தவிச்ச வாயிக்கி-
தண்ணி இல்ல!

பச்சபுள்ள-
வயித்துக்கு-
பால் இல்ல!

கட் அவுட்டுக்கு-
பாலபிசேகம் செய்யிற-
காவாளிகளுக்கு-
குறை வில்ல!

கஞ்சிக்கே-
வழியில்ல!

"முதல் காட்சியை'-
விடுறதில்லை!

வாழ்வாதார பொருட்களின்-
விலை -
வானை-
முட்டுது!

வாழ்வை கெடுக்கும்-
மதுபான கடை-
தெருவுக்கு ஒன்னு-
திறக்கபடுது!

எதிர்கால இந்தியா-
இளைஞர்கள் கையிலன்னு-
சொன்னாங்க!

இளைய சமூகத்தை-
"பாட்டிலோட"-
அலையிற நிலையில-
தள்ளிட்டாங்க!

காணி நிலத்தை-
வித்து கல்லூரிக்கு-
புள்ளைங்களை-
அனுப்புறாங்க!

தாவணிகள் பின்னால-
சுத்துறானுங்க!

எல்லாத்தையும்-
சொல்லலைங்க!

நல்ல உள்ளங்களும்-
இருக்குறாங்க!

நான் சொல்ல போறது-
அந்த உள்ளங்களில்-
ஒண்ணுங்க!

நட்டதெல்லாம்-
மரம் ஆகுமா!?

மரங்களெல்லாம்-
நிழல் தான்-
தருமா!?

"பிறந்தவங்க எல்லாம்"-
பிரயோஜனம்-
ஆனாங்களா!?

நாமளாவது-
பிரயோஜனம்படுமாறு-
நடக்கிறோமா!?

சமையல் கலையில்-
பல விருதுகள்-
பெற்றவன்!

வெளிநாட்டில்-
 வேலை கிடைத்து-
சென்றவன்!

மனிதனே பசியால்-
மலத்தை தின்ற-
அவலத்தை கண்டு-மதுரையில்
ஸ்தம்பித்து நின்றவன்!

புத்தி சுவாதீனம்-
இல்லாத மக்களுக்கு-
தேடி சென்று -
உணவு கொடுப்பவன்!

அந்த நல்ல உள்ளம்-
கொண்டவனின்-
பெயர்-
நாராயணன் கிருஷ்ணன்!

நண்பா!-
உன்னை போல ஒருவனை-
நாலு பேருக்கு அறிய செய்ததில்-
மகிழ்கிறேன்-
நான்!

(குறிப்பு- நம்பிகையான நண்பரிடம் இருந்து வந்த மின் மடல் மூலம்-
கிருஷ்ணன் அவர்கள் பற்றிய
தகவல்கள் பிற்பகுதியில் சேர்த்துகொண்டது-
உங்களால் முடிந்தவர்கள்-
உதவுங்கள்!

Akshaya's Helping in H.E.L.P Trust.
9 west 1st main street,
Doak nagar Extension,
madurai 625 010 India
cell.+91 98433 19933)




Monday, 3 September 2012

அர்பணிக்கிறேன்....

மரங்களை வெட்டிட -
தடை-
நாட்டிலே!

மனிதர்களை-
வெட்டுவது -
இங்கே குறைவில்லை!

மானை வேட்டையாடினான் -
பரபரப்பு-
செய்தியானானே!

மனிதங்களை-
மாண்டிட செய்தவர்கள்-
பதவிகளிலே!

துரத்தி துரத்தி-
சீரழிக்கபட்டார்கள்!

உயிரோடு-
உருக்குலைக்கபட்டார்கள்!

சொந்த மண்ணிலேயே-
ரத்தம் சிந்தபட்டார்கள்!

இதுக்கா !?-
சுதந்திரத்துக்கு-
நம்முன்னோர்கள்-
சிந்திய ரத்தங்கள்!

காமம் என்பது-
உணர்ச்சி -
அடங்கும்வரை!

கோபம் என்பது-
உணர்ச்சி-
வெளிபடுத்தும்வரை!

உணர்சிகள்-
நாட்கணக்கிலா-
தொடரபடுது!!?

திட்டமிட்ட -
படுகொலையை!-
உணர்சிவசபட்டர்கள்-என்பதை
எப்படி ஏற்பது!!?

காட்டையே-
 திகிலில் ஆழ்த்தும்-
சிங்கத்தின் கர்ஜனை!

"தூங்கி" கிடக்கும்-
சோம்பேறிகளை-
அதட்டி எழுப்பும்-
நீதிக்கான-
போராட்டங்களே!

தண்ணீர் ஓடும்-
வழியே நீந்துபவன்-
சராசரி!

அதனை எதிர்த்து-
நீந்துபவன்-
லட்சியவாதி!

எனக்கென்ன!?-வாழ்பவன்
மூச்சு மட்டும்-
விடுகிறான்!

தன்னால் ஆனதென்ன!?-
யோசிப்பவன்-
சாதித்து விடுகிறான்!

அநீதியை கண்டு-
உன் ரத்தம் கொதித்தால்-
நீயும் நானும்-
சகோதரர்கள் -என்று
சேகுவேரா முழங்கினான்!

நூறாண்டுகள்-
ஆட்டு மந்தையாக-
வாழ்வதை விட-
ஒரு நாள் புலியாக -
வாழ்வது மேல்-என்று
சூளுரைத்தான்-
திப்பு சுல்தான்!

குஜராத் எனும்-
கொலை களத்தில்-
நீதி மலர போராடினார்-
தீஸ்டா செடல்வாட் எனும்-
சகோதரி!

சகோதரியே!
உன் தியாகத்திற்கு-
நன்றி சொல்லிகொள்கிறேன்-
இக்கவிதை வழி!

வருங்கால சரித்திரம்-
சொல்லும் -
உன் பெயரை!

உறமேற்றிட செய்யும்-
வரும் தலைமுறையை!



Saturday, 1 September 2012

விழிகளின் வழியே வலி.....

பட்டும்-
படாமலும்!

பார்த்தும்-
பார்க்காமலும்!

நிலையில்லாமலும்!
நிலை குத்தியும்!

பல நேரங்கள்-
வலிகளையும்!

சில நேரங்கள்-
மொழிகளையும்-
பேசியது!

அம்மொழிகள்-
நம் இருவருக்கு -
மட்டும்-
விளங்கியது!

ஜன்னல் கம்பிகளும்-
கண்ணீர் வடிக்கும்!

கதவு இடுக்குகளுக்கும்-
காய்ச்சல் அடிக்கும்!

நம் கண்கள்-
சந்தித்திடவில்லை-என்பதை
தெரிந்ததும்!

நின்று நிதானித்து-
பார்த்திடவில்லை!

அவ்வளவு நேரமோ-
நமக்கு வாய்திடவில்லை!

எதிர் திசைகளில்-
பயணிதிடும்போது-
சில நொடிகள்!

அத்தருணங்களில்-
பரிமாறிகொண்ட-
விசாரிப்புகள்!

சாற்றை எடுத்து விட்டு-
சக்கையை துப்பிவிடும்-
கரும்பு சாறு-
இயந்திரம்!

தேடல்களில் "தள்ளியது"-
வாழ்வாதாரம்!

"தேடலின்"பின்-
"அறிந்தால்"!

பாவை அவளோ-
இன்னொருவனுக்கு-
பாத்தியபட்டவளாக-
இருந்தாள்!!

நீண்ட இடைவெளிக்கு-
பிறகு!

நம்மை சந்திக்க-
வைத்தது-
காலம் எனும்-
படகு!

அப்பொழுதும்-
எதிர் திசைகளில்!

மும்முரமாக-
ரயில் பயணத்தில்!

கண்டேன்-
நான் -
உன்னை!

கண்டதாக-
தெரியவில்லை-
நீ!
என்னை!

கொஞ்சம் ஆறுதலாக-
இருந்தது-
எனக்கு!

நீ-
கவனிக்காமல்-
இருந்ததற்கு!

ஆமாம் -
மேலும் நான்-
உனக்கு "வருத்தம்-"
தராமல் சென்றதற்கு...!!