Friday 15 February 2013

ஹபீப்-குர்சியத்(17)

உலகையே -
படைத்தவன்!

உயிர்களையும்-
வசிக்க செய்தவன்!

எல்லாவற்றுக்கும்-
உணவளிப்பவன்!

சொல்கிறான்-
இறைவன்-
படைப்புகளில்-
ஒன்று!

சிறந்தவன்-
மனிதன் என்று!

சோதனை தரும்-
இறைவன்!

காரணத்தையும்-
சொல்கிறான்!

"எந்த ஒரு ஆத்மாவும்-
மரணத்தை சுவைக்காமல்-
இருப்பதில்லை-"
எனவும்!

"இரும்பு கோட்டையில் இருந்தாலும்-
மரணம் வந்தடைந்தே-
தீரும்"-
எனவும்!

"நபியே !நீர் கூறுவிராக-
அல்லாஹ் விதித்ததை அன்றி-
வேறெதுவும் அணுகாது என்று...!"
எனவும்!

"எந்த ஒரு ஆத்மாவும்-
தாங்கிக்கொள்ள முடியாத-
சோதனைகளை இறைவன்-
தருவதில்லை-"எனவும்!

உங்களுக்கு முன்னிருந்த சமூகம்-
அடைந்த சோதனையும்-
வேதனையும் அடையாமல்-
சுவர்க்கத்திற்கு செல்லலாமென்று-
நினைத்தீரோ-!?"
எனவும்!

மரத்திலிருந்து விழும்-
இலைகளையும்....!
அவன் அறிவான்-
எனவும்!

இப்படியாக-
இறை மொழி-(குர் ஆன்)
சொல்லியதை-
எண்ணிடுவோம்!

கேள்விகள்-
மனதில்-
எழலாம்!

எதற்கு-
நாம் பூமியில்-
வாழனும்!

ஏன்-
இறைவன்-
நம்மை படைக்கணும்!?

இவ்வுலக வாழ்கை-
ஒரு சோதனை களம்!

நல்லவர்கள் யார்!?
தீயவர்கள் யார்!?
சோதித்து அறியும் இடம்!

இது இறைவன் கூற்றுப்படி-
நடக்கிறோமா!?-என
நினைத்திடும்-
தருணம்!

பார்ப்போம்-
சிலவற்றை மட்டும்!

படைப்பின்-
காரணம்!

தினமும்-
"இறைவனுக்கு நன்றி-
செலுத்திட!"

"பசித்தவனுக்கு-
பசியாற்றிட!"

"அநீதி இழைக்கப்பட்டவனுக்கு-
நீதி கிடைத்திட!"

"ரத்த உறவுகளை-
பேணி காத்திட!"

"உழைத்தே-
உண்டிட!"

"ஆண்குழந்தை-
பெண் குழந்தை-
பாரபட்சம் பாராமல்-
வளர்த்திட!"

"அனாதைகளை-
அரவணைத்திட!"

"பிற மனிதர்களையும்-
நேசித்திட!"

இதன் மூலம்-
இறை திருப்தி-
அடைந்திட!

ஹபீப்-
மீண்டு-
வா!

மீண்டும்-
வா!

இம்மை-
மறுமை வாழ்கை-
வெற்றிக்கு-
நாம்-
உழைப்போம்-
வா!

----------------முற்றும்---------------

/// ("") இக்குறிவுள்ள அனைத்து -உபதேசங்கள் -
குர் ஆன் -
நபி மொழிகளில் அறிந்தவைகள்///

//குர் ஆன் என்பது இறைவனின் மொழியாகும்.நபிகளார் அவர்களுக்கு வானவர் ஜிப்ரயீல் (அலை..)மூலம் இறைவனின் வாக்கை அறிவித்தவையாகும்.

நபி மொழி -என்பது முஹம்மது நபி (ஸல் )அவர்கள் சொன்னவைகள்.
செய்தவைகளாகும்.//

4 comments:

  1. படைப்பின் காரணமும் அதை விளக்கிய விதமும் வெகு சிறப்புங்க.

    ReplyDelete
  2. இறைமொழிகளுடன் அருமையாய் முற்று பெற்ற கவிதை அருமை! நன்றி!

    ReplyDelete