Saturday 2 February 2013

ஹபீப்-குர்சியத் (4)

வந்தார்கள்-
"வெள்ளை அசரத்"-என
அழைக்கப்பட்ட-
மாலிக் அசரத் அவர்கள்!

வெள்ளை அசரத்-
மார்க்கம் சொல்லி தந்து-
மனதில் குப்பை அடையாமல்-
சுத்தம் செய்தவர்கள்!

அவதூறுகள்-
குவிக்கபட்டாலும்-
முகலாயர்கள் மீது!

தாஜ் மகாலும்-
செங்கோட்டையும்-
பொய் என்று-
பறைசாட்டுகிறது-
அம்முகலாயர்கள்  மீது!

ஒப்பிலான்-
அடைந்த -
சீர்திருத்தங்கள்!

வெள்ளை அசரத்தை-
நினைவூட்டுபவைகள்!

சீர்திருத்தவாதிகளும்-
நல்லவர்களும்-
மறக்க முடியாத-
மறைக்க முடியாத-
வரலாறுகள்!

"வணக்கத்திற்கு உரியவன்-
ஒருவன்!

அவனை-
யாரும் பெறவுமில்லை!
அவனால்-
யாரும் பெறப்படவும் இல்லை!
அவனே இறைவன்!

தொழுகையில்-
படைத்தவனுக்கு-
நன்றி செலுத்திடு!

பிறகு-
அவன் உனக்கு வைத்துள்ள-
உணவை உலகில்-
தேடி எடுத்திடு!

பதினோருமாதம்-
அனுமதித்ததை-
பூரணமாக-
சாப்பிடு!

ஒருமாதம்-
பகலில்-
இறைவனுக்காக-
பசித்திரு!

அளவுக்கு மேல்-
இருப்பதை-
கணக்கிட்டு எடுத்து-
ஏழைக்கு கொடுத்திடு!

பசித்தவர்கள்-
பசியை போக்கிடு!

வசதியும் -
வாய்ப்பும் -
இருந்தால்-
புனித காபாவுக்கு-
சென்று விடு!

அதன் வழி-
மனித புனிதர்கள்-
தியாகங்கள்-
அறிந்திடு!

மூடதனம்!
முட்டாள் தனம்!

படைப்புகளை-
நேசிக்காதவனை-
படைத்தவன் நேசிப்பதில்லை!""

எத்தனை எத்தனை-
சொல்லித்தந்தார்கள்-
குர் ஆன்- மற்றும்-
நபிகளார் மொழிகளின்-
வழியிலே!

நேரம்-
கடந்தது!

காலை நேர-
மதரசா-
முடிந்தது!

இன்றைக்கும்-
நினைவில் வருகிறது-
சிட்டாக பறந்தது!

புல் வீசும்போது-
பறந்து விட்டு-
திரும்பும்-
புறாக்கள் கூட்டம்போல!

கல்லெறிந்தால்-
குளத்திலிருந்து-
பறந்து விட்டு வரும்-
கொக்குகள் கூட்டம்போல!

மார்க்கம் படித்து விட்டு-
பள்ளிகூடத்தில்-
இணைவோம்-
அப்பறவைகள் கூட்டம்போல!

(நினைவுகள் சுழலும்....)

///புனித காபா-முஸ்லிம்களின் இறுதி கடமைஹஜ்.மக்காவில் உள்ள
முதல் இறை ஆலயமாகும்.///





3 comments:

  1. அருமையாக செல்கிறது நினைவுகள்! தொடருங்கள்! தொடர்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. suresh!

      ungal thodarum aatharvirkku mikka nantri!

      Delete
  2. thamil !

    ungal
    muthal varavirkku mikka nantri!

    ReplyDelete