Monday 18 February 2013

"நாயகன் "இருந்துட்டா....!!?

கிழக்கால-
கதிரவன்-
உதிக்குமா!?

மும்மாரி -
மழைதான்-
பெய்யுமா!?

ராமேஸ்வர கடலில்-
கலந்திடும்-
ரத்தம்தான்-
நிறுத்தப்படுமா!?

தீண்டாமைதான்-
தேசத்தை -
விட்டு விரண்டோடுமா!?

காவேரிதான்-
கரைபுரண்டு-
வந்திடுமா!?

முள்ளை பெரியாறுதான்-
"முக்காமல்-"
"முனங்காமல்"-
இருந்திடுமா!?

விவசாயமக்களின்-
பிளந்துபோன-
நிலங்கள்தான்-
விளைந்திடுமா!?

நாடெங்கும்-
சாந்தியும் -
சமாதானமும்-
நிறைந்திடுமா!?

சிவகாசி -
தீயில் சிக்கிய-
சகோதர சகோதரிகளுக்கு-
நீங்க கொடுத்த-
நிவாரணம்-
தடைபடுமா!?

கும்பகோண தீவிபத்தில்-
பலியானவர்கள்-
குடும்பத்திற்கு-
சகாக்கள் -(நடிகர்கள்)
"சொன்ன உதவிகள்-"
செய்யப்படுமா!?

ஊழல்தான்-
ஒழிந்திடுமா!?

நாட்டுக்காக-
போராடிய-
நேதாஜி-
"என்ன ஆனார்"-
என்றே-
தெரியவில்லையே!

சல்லடையாக்கபட்ட-
திப்பு சுல்தானையே-
மறந்த நிலையே!

உயிர் தியாகிகளையே-
மறந்தோம்!!

அவரவர்-
கவலையே-
பெரிதாக-
அலைகிறோம்!

"நாயகன்"-
நீங்க-
காசு பணம்-
இருக்கு-
எங்கே வேணும்னாலும்-
போகலாமுங்க!

எங்களை சொல்லுங்க-
வாழ வழியில்லாவிட்டாலும்-
இங்கேதான்-
வாழனுமுங்க..!

நீங்க-
நடிச்சா-
பங்களா-
சொகுசான-
காரு!

நாங்க-
உழைச்சாத்தான்-
அடுத்தவேளை-
சோறு..!
-------------------------
// சிவகாசி பட்டாசு விபத்தில் சிக்கியவர்களுக்கு எந்த தமிழக நடிகர்களும் உதவிடவில்லை!
மலையாள நடிகர் முஹம்மது குட்டி(மம்முட்டி) லட்சகணக்கில்-
மருந்துக்கள் வழங்கினார்.

கும்பகோண விபத்தில் சிக்கிய
குழந்தைகள் பலியானதற்கு நடிகர்கள் நிதி உதவிசெய்வதாக சொல்லிவிட்டு .இதுவரை செய்ததாக தகவல்கள் இல்லை///




        

8 comments:

  1. நச்சென்று எண்ணங்கள்
    நறுக்குத் தெறித்தாற் போல்..

    ReplyDelete
  2. இருந்துட்டா இல்லாதவைகள் போய் விடுமா
    என்ன ? சரியே !

    ReplyDelete
  3. விடை கிடைக்காத கேள்விகள்!

    ReplyDelete
  4. விடையில்லா கேள்விகளை கொண்டு விறுவிறுப்பான கவிதை! பாராட்டுக்கள்!

    ReplyDelete