Friday 22 February 2013

ஐயோ....ஹைதராபாத்..!!

குண்டூசி-
கண்ணில் -
குத்தியது-
போல!

பனி பாறைகொண்டு-
முதுகுதண்டில்-
அடித்தது-
போல!

உச்சி முடியை-
கட்டி-
இழுத்தது-
போல!

வெடிப்பு-
சம்பவத்தால்-
மனம் வலிகொண்டது-
அதுபோல!

இது-
அரசியல்-
நாடகமா!?

மதவாதமா!?

தேர்தல்-
முன்னோட்டமா!?

இப்படியாக-
விவாதிக்கபடுது-
ஒரு யூகமா!!

கண்ணில்பட்டது-
ஒரு புகைப்படம்!

காயங்கொண்டது-
என் மனம்!

இரத்தக்குளியலில்-
இறந்துகிடந்தாள்-
ஒரு இளம்பெண்!

இறந்தவளின்-
கையை பிடித்து-
அழுதுகொண்டிருந்தாள்-
இன்னொரு பெண்!

சேரும்-
சகதியும்-
சேர்ந்தது-
விவசாயம்!

ரத்தமும்-
சதையும்-
பிச்சி எறியப்பட்டதால்-
செத்துப்போனது-
மனிதநேயம்!

மிருகங்கள்-
தன் -
ஜீவ ஆகாரத்திற்காக-
வேட்டையாடும்!

மாபாதகர்களே!-
பிணங்களை -
தின்னவா!?-
இந்த-
கொலைவெறியாட்டம்!?

உயிரிழந்தவர்களின்-
அலறலும்!-
அவர்களின்-
உறவுகளின்-
கதறலும்!

ஒரு நாள்-
இந்த நாசசெயல்-
செய்தவர்களே!-
உங்கள்-
மனசாட்சியே-
குடையும்!

இல்லைஎன்றால்-
மரணத்திற்கு-
பிறகாவது-
மண்ணறையில்-
தண்டனை-
சத்தியமாக-
கிடைக்கும்!

மண்ணிற்கு மேல்-
தப்பலாம்-
மண்ணுக்குள்-
போன பின்-
தப்ப வழி இருக்கும்...!?




6 comments:

  1. வலிமிகுந்த கவிதை
    சமூக கோபத்தோடு

    ReplyDelete
  2. என்று ஒழியும் இந்த குண்டு வெடிப்புக்கள்! அப்பாவிகளை எண்ணி பார்க்க மாட்டார்களா வைத்தவர்கள்?

    ReplyDelete
    Replies
    1. makkalum-
      sattamum unmaiyai arinthaalthaan.....


      nantri sako..!

      Delete