Monday 25 February 2013

நினைப்புதான்....!!

என்னோமோ-
வாயிலிருந்து-
ஏவுகணையை-
விண்ணுக்கு-
அனுப்புவதாக-
நினைப்பு!

தன்னுடலுக்குள்-
தானே "விஷத்தை"-
விதைப்பதை-
ஏனோ -
மறப்பு!

சொல்வாங்க-
நினைப்புதான்-
"பொழப்பை"-
கெடுக்கும்னு!

ஏனோ-
சிந்திக்க மறுக்குறாங்க-
"புகை பிடிப்பதால்-"
யாருக்கு-
லாபம்னு....!?

பெண்கள்கூட-
புகை இழுக்குறாங்க!

ஒரு சமூக சேவகி-
ஏன் "பிடிப்பதாக"-
கேட்டாங்க!

ஆண் புகைபிடிப்பதால்-
தானும் (பெண்)-
"பிடிப்பதாக-"
பதில் சொல்லுறாங்க!

ஏங்க எதுலதான்-
போட்டின்னு-
இல்லையாங்க!?

ஆணோ -
பெண்ணோ-
யார் "புகை பிடித்தாலும்-"
தனக்குள் -
புற்றுநோயை -
விதைக்கிறீங்க...!!!

11 comments:

  1. ஆண் புகைபிடிப்பதால்-
    தானும் (பெண்)-
    "பிடிப்பதாக-"
    பதில் சொல்லுறாங்க!

    ஏங்க எதுலதான்-
    போட்டின்னு-
    இல்லையாங்க!?

    நல்ல கேள்வி...

    நானும் இப்படித்தான் ஒரு பெண்ணிடம் கேட்டேன்.
    அவள் “முதலில் அவனை நிறுத்தச் சொல்லுங்கள்.
    நானும் நிறுத்தி விடுகிறேன் “ என்கிறாள்.

    நினைப்புதான்.... நமக்கும் யாரையாவது திருத்தனும் என்று.... எங்கே....

    ReplyDelete
    Replies
    1. aruna sako..!


      muyarchippom ketpavarkal ketkalaam....

      varavirkku mikka nantri!

      Delete

  2. வணக்கம்!

    புகையே! மனத்தைப் புரட்டி அரிக்கும்
    பகையே! படரும் வலியே! - தொகையே
    கொடுத்துனை வாங்கிக் கொளுத்தும் உலகைத்
    தடுத்திடத் தந்தார் தமிழ்!

    ReplyDelete
  3. திருந்துவது, திருத்துவது - சிறிது சிரமம் தான்...

    ReplyDelete
    Replies
    1. baalan sako...!

      unmaithaan irunthaalum
      muyarchikkalaame....

      mikka nantri ungal larutjirkku ...

      Delete
  4. புகை நமக்கு பகை என்பது புரியாதவரைக்கும் கஷ்டம் தான்.....

    நல்ல கவிதை சீனி.

    ReplyDelete
  5. விழிப்புணர்வு கவிதை அருமை!

    ReplyDelete
  6. கவிதை வரிஅக்ளைல் சமூகத்திலுள்ள உங்களுக்கான தெரிகிறது.தொடருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. sako ..!

      enna sollavantheekanu enakku vilangala...

      aanaalum karuthittamaikku mikka nantri sako....!

      Delete