Wednesday 13 March 2013

பொறு....!

செதுக்குதலில்-
வலியை-
பொறுக்கும்-
மரப்பலகைகள்-
வீட்டு அலங்காரமாகிறது!

சிணுங்கி-
உடைந்திடும்-
பலகைகள்-
அடுப்புக்கு-
விறகாகிறது!

வாழ்வில்-
வலிகளை-
தாங்குபவனே-
சாதிக்கிறான்!

முனங்கி-
அலைபவனோ-
கரண்டைக்கால்-
நீரிலேயே-
மூழ்கிவிடுகிறான்!

6 comments:

  1. உங்களின் தளம் பற்றிய சிறு விளக்கம் ...
    காண :http://blogintamil.blogspot.in/2013/03/blog-post_14.html

    ReplyDelete
  2. உண்மையாண வரிகள். . .

    அழகிய கவிதை. . .

    ReplyDelete
  3. உண்மை உணர்த்தும் கவிதை! அருமை!

    ReplyDelete
  4. அருமையான கருத்துடைய கவிதை.
    இரசித்தேன்.

    ReplyDelete