Monday 18 March 2013

ஆயுள்...!

உயிர்பிக்க-
முடியாதவன்!      

உயிர்பறிக்க-
பார்க்கிறான்!

இயற்கையை-
அழித்தவன்!

மனிதர்கள்-
பூமியில்-
வாழ வழியை-
அடைத்தவன்!

கொஞ்ச கொஞ்சமாக-
கொத்து கொத்தாக-
சாகடிக்கிறான்!

அநியாயம்-
அடக்கம் -
இல்லாமல்-
செய்யலாம்!

உலகையே-
நீதி பேசாமல்-
ஊமையாக்கலாம்!

வாழும்போது-
சாமானியனையும்-
சாவின் விழும்பிற்கு-
தள்ளலாம்!

மரணம் -
ஒவ்வொருவரின்-
தொண்டைக்குழியை-
அடைக்கையில்-
எப்படித்தான்-
தப்பிக்கலாம்!?

ஹிட்லரும்-
முசொலினும்-
நேற்றைய-
சர்வாதிகள்!

இருந்திருப்பார்கள்-
இருக்கிறார்கள்-
அவர்களையும்-
மிஞ்சியவர்கள்!

அச்சர்வாதிகாரர்களின்-
எப்படி இருந்தது-
இறுதி முடிவுகள்!?

இறைவனால்-
ஒருவனுக்கு-
கொடுக்கப்படும்-
ஆயுள்!

ஒன்று-
பாவத்தில் இருந்து-
மீண்டிட!

மற்றொன்று-
பாவசெயல்களிலேயே-
தட்டழிந்திட!

கொஞ்சம் நாம்-
சிந்திப்போமாக-
நம்மை நாமே-
சீர்தூக்கி-
பார்த்திட....!!




3 comments: