Monday 11 March 2013

ஏண்டா இந்த மானம் கெட்ட பொழப்பு...!?

கட்டி பிடிக்க-
இவ்வளவு!

இறுக்கி-
அணைக்க-
இவ்வளவு!

சாதா முத்தம்-
இவ்வளவு!

சாக்கடை-
முத்தம்-
இவ்வளவு!

சேலைக்கு-
இவ்வளவு!

சேலை தவிர்க்க-
இவ்வளவு!

முழு ஆடை-
இவ்வளவு!

இரு ஆடை-(டூ பீஸ்)
இவ்வளவு!

அரை நிர்வாணம்!
முக்கால் நிர்வாணம்!

முழு நிர்வாணம்!
எல்லாம் செய்யபடுது-
வருமானம்!

நாறுவது -
என்னவோ-
தன்மானம்!

ஆண்-
"சிக்ஸ் பேக்"-
காட்டுகிறான்!

பெண்ணை-
"செக்ஸ் பாம்"-என
காட்டுகிறான்!

அச்சம் -
மடம்-
நாணம்-
பெண்களுக்கு-
மட்டுமா!?

ஆண் கடைபிடித்தால்-
மோசம் போய்டுமா!?

திரை துறை-
நல்ல பல-
பொழுதுபோக்கு-
சாதனம்!

சாதனம்-
விழுந்து விட்டதோ-
சில சாக்கடைகளிடம்!

அன்று-
மண்ணையும்-
மனிதனையும்-
பதிந்தார்கள்!

இன்று-
மனதையும்-
மானத்தையும்-
குதறுகிறார்கள்!

இதன் -
விளைவாக!

இரு நடிகைகள் மீது-
நடவடிக்கை-
எடுக்க சொல்லி-
தீர்ப்பு சொல்லிடாங்க..!

இனியாவது-
புரிந்து-
நடப்பார்களா!?

பிரயோசனமான-
கலைப்படைப்பை-
தருவார்களா..!?

// வழக்கு தொடுத்தவர்- சமூக சேவகர்-ஆந்திர மாநில வழக்குரைஞர் எல். சுபுதி.
தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்-
ஹைதராபாத் நீதி மன்றம்.
நடிகைகள்-அனுஷ்கா .பிரியாமணி.//
நன்றி- சிந்திக்கவும் வலைத்தளம்.
மேலும் தகவல் படிக்க பார்க்கவும்-
இந்த இணைப்பை..!





6 comments:

  1. எல்லாம் பணம் தான்... அதனால் இப்படித்தான்...

    ReplyDelete
  2. பணத்துக்காக மனிதன் எப்படி எல்லாம் மாறுகிறான்!!!

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  3. திரைத்துறை கொஞ்சம் கொஞ்சமாக சாக்கடையாகிவிட்டது! அவ்வப்போது ஒரு சில சந்தனங்கள் வரும்! அதை யாரும் கவனிப்பது இல்லை!

    ReplyDelete
  4. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!என்ன அருமையான குடும்பபடங்கள் வந்தன!

    ReplyDelete
  5. பெரும்பாலும் நீங்கள் கூறியவை போலவே படங்கள்
    வருகின்றன...
    அத்தி பூத்தது போல சில படங்கள் வந்து போகின்றன...
    இன்றைய திரை உலகமும், பார்வையாளர்களும்
    சிந்திக்க வேண்டியது...

    ReplyDelete
  6. பணத்திற்காக எதையும் செய்யும் காலமிது சீனு!

    ReplyDelete