Monday 3 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (18)

மன்னர்-
சொன்னார்!

''குருவே!
உங்களுக்கு-
வசதிகள் செய்யபட்டுள்ளது!

கொஞ்ச காலம்-
''தங்க''வேண்டியுள்ளது!

ராஜ குரு-
உருமினார்!

''அரசே!
நெருப்பிடம் விளையாடுகிறீர்கள்!

''மக்கள் அறிந்தால்-
ஆட்சியில் மண் விழுந்திடும் என்பதை-
நீங்கள் அறிந்திருப்பீர்கள்!

மன்னர் தொடர்ந்தார்-
ஆம்!
மக்கள் அறியனும்-
உனது யோக்கியத்தை!

கிரீட திருட்டில்-
பங்குள்ளதை!

என் கழுத்திற்கு-
காளி , மாரி ரூபத்தில்-
கத்தியனுப்பியதை!

கன்னியர்கள்-
கசக்கி எறியபட்டதை!

ஆட்சியை கவிழ்க்க-
ரகசிய ஒற்றர்படைக்கு-
விஷ்ணுபட்டர் நியமிக்கபட்டதை!

சொல்லிக்கொண்டிருந்த-
மன்னர்-
ராஜ குரு சீடர்களை-
கோப பார்வையால் தாக்கினார்!

சீடர்கள்-
சாஷ்டாங்கமாக விழுந்ததை-
கண்டார்!

மன்னர்களை-
ஆட்டங்காண வைத்த ராஜ குரு-
ஆடிப்போனார்!

''சொல்வதை கேட்டால்-
மடாலயத்தில் அறை!

அடம்பிடித்தால்-
பாதாள சிறை!''

எது வேண்டும்-!?
மன்னர் கேட்டார்!

கடும் எச்சரிக்கை!
கடுமையான நிபந்தனை!

விதித்து அனுப்பினார்!
மன்னர்!

மக்களிடம் -
'சொல்லபோவதையும்''-
விளக்கினார்!

இருவர் சுமக்க!

வலது , இடதாக-
சீடர்கள் நடக்க!

திரையிட்டு-
ராஜ குரு இருக்க!

புறப்பட்டது-
பல்லாக்கு!

மடாலயத்திற்கு!

ராஜ குரு-
உள்ளிருந்தவாரே-
மெதுவாக செல்ல உத்தரவிட்டார்!

மெதுவாக செல்ல!

சீடர்களிடம் -
முக்கிய வேலை சொல்ல!

சீடர்களிடம்-
குரு மகான் உதவி கேட்டார்!

ஆயிரம் பொற்காசுகளுக்கு-
பேரம் பேசினார!

ஒரு சீடர் மறுத்தார்!

மற்றொருவர் -
உறுதி பூண்டார்!

மறுத்தவரையும்-
சம்மதிக்கவைத்தார்!

குரு மகான்-
சர சரவென எழுதி!

விஷ்னுபட்டரிடம் கொடுக்க-
சீடரிடம் கொடுக்கிறார்-
ஓலைச்சுவடி!

பல்லாக்கு அடைந்தது!-
சந்நிதானம்!

எங்கும் கேட்டது-
மக்கள் வாழ்த்து முழக்கம்!

தேச நலனுக்கு மௌன விரதம் இருக்க போகிற குரு மகான்!

வாழ்க! வாழ்க!!

தவத்தில் திளைக்க போகும் குரு மகான்!

வாழ்க! வாழ்க!!

மன்னர் எழுதிய வசனம்!

மக்களும் நம்பி உற்சாகம்!

குரு மகான் அமர்ந்தார்-
மேடை மேலே!

பலி கொடுக்க போகும்-
ஆட்டை போல!

விஷ்ணுபட்டரை-
ராஜ குரு பார்த்தார்!

விஷ்ணுவின்-
அருகிலிருந்தவர்களை கண்டதும்-
உயிரே போனதுபோல் உணர்ந்தார்!

ஏன்!?

அருகில் நின்றது-
பல்லாக்கு தூக்கி வந்தவர்கள்!

ஆம்-
பல்லாக்கு தூக்கிகளாக-
வேடமணிந்த-
தளபதியாரும்!
சிங்கராயரும்!

(தொடரும்....!!)



4 comments:

  1. அப்படிப்போடுங்க....அருமை! அருமை!

    ReplyDelete
  2. சுவாரஸ்யம் குறையவில்லை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete