Friday 7 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (22)

சேதுபத்திரர்-
 கேள்வியால்!

ஒருவரையொருவர்-
பார்த்தார்கள்-
ஒற்றர்கள்!

''பிரபுவே!
நாங்கள் சொல்லபோவது-
ராஜ குருவால் சொல்லபட்டவைகள்!

அரபிக்கள்-
நீச சாதியினர்கள்!

மந்திரவாதிகள்!

பேதை பித்தர்கள்!

போதை வெறியர்கள்!

நம் மண்ணில் கொல்லபட வேண்டியவர்கள்!''

இது-
ஒரு ஒற்றர்

தொடர்ந்தார்-
மற்றொருவர்!

''அவர்கள்-
இக்குற்றங்கள் செய்பவர்களாக இல்லை!

ஆதலால்-
''மாட்டி விட''வழியேதும் இல்லை!

ஆனால்-
கோவில் பக்கமாக சுற்றுகிறார்கள்''!

இவைகளை-
மற்றவர்களும்-
தலையாட்டி-
ஆமோதித்தார்கள்!

''நான்-
கவனிக்கறேன்!

இனி-
அரசருக்கு எதிராக நடப்பவற்றை-
கண்காணிக்க உத்தரவிடுகிறேன்!''

கட்டளையிட்டு-
கூட்டத்தை முடித்தார்-
சேதுபத்திரர்!

''தூரோகிகளை மறைந்து நின்று-
காட்டி கொடுத்த-
வேணுவும், சீடரும்!

விலங்கிட்டு-
சிறைக்கு அழைத்து செல்லபட்டார்கள்-
திரும்பவும்!

தளபதிக்கும்-
சேதுபத்திருக்கும்-
மன்னர் அழைப்பு வந்தது-
காவலர் வாயிலாக!

விரைந்தார்கள்-
இருவரும்-
காற்றோடு காற்றாக!

அரசர் -
அரண்மனையில்-
களைத்துபோய் இருந்தார்!

மாறு வேட ஒப்பனையை கூட-
கலைக்காமல் இருந்தார்!

இருவரும்-
வந்தார்கள்!

மன்னருக்கு-
மரியாதை செய்தார்கள்!

மன்னர் கண்ணசைக்க-
இருவரும் அமர்ந்தார்கள்!

''ராஜ பீட விவகாரம்..!?''
மன்னர்-
கேட்டார்!

''அரசே!
வைர வைடூரியங்களை-
அள்ளி சென்றுள்ளார்கள்-
நான் செல்வதற்குள்!''

சிந்தி கிடந்த -
வைரங்களை வைத்திருந்தார் -
தன் கையினுள்!

காட்டினார்-
சேதுபத்திரர்!

மன்னர் திரும்பி -
''நீர் ஓடிய சமாச்சாரம்..!?-
தளபதியாரிடம் கேட்டார்!

''அரசே!
நான் ஓடியது-
ராஜ குரு -
தப்பித்திருக்கலாம்-என்ற
எண்ணத்தில்!


ஆனால்-
அவர் இருப்பதற்கான -
சப்தங்கள் கேட்டது-
அறையினுள்!

காவலை அதிகரித்துள்ளேன்!

உங்கள் அழைப்பினால்-
இங்கு வந்துள்ளேன்!''

தளபதியார்-
சொன்னார்!

மன்னர்-
கேட்டார்!

தாமதிக்காமல்-
ஆணையிட்டார்!

''படைகளை தயார் படுத்துங்கள்!

சிங்கராயரை தலைமையாக்குங்கள்!

மார்த்தாண்ட வர்மனின் படைகளை சிதறிடியுங்கள்!

கூடுமானவரை  மார்த்தாண்ட வர்மனை உயிருடன் பிடியுங்கள்!

வேணு, காளியை  இடம் காட்டிகளாக பயன்படுத்துங்கள்!

வேணு,காளி துரோகம் இழைத்தால் கழுவிலேற்றம் என்பதை தெரியபடுத்துங்கள்!

போகும் வழியில் அரபிக்கள் குழு படையுடன் கலந்து கொள்வார்கள்!''

மன்னர் -
அணைகளை பிறப்பித்தார்!

அமைச்சர்கள்-
நிறைவேற்றினர்!

அங்கு-
படை புறப்பட்டது!

இங்கு-
மன்னருடன் ஆலோசனை நடந்தது!

சேதுபத்திரர்-
தொடர்ந்தார்!

''மன்னா!
நாம்  நாட்டிலுள்ள-
புல்லுருவிகளை பிடுங்குகிறோம்!

ஆனால்-
அரபிக்கள் விவகாரத்தால்-
கலக்கம் அடைந்துள்ளோம்!

இரவில் பயிற்சி நடக்கிறது!

மீனவ சமூகம் கலந்து கொள்கிறது!

சொல்லி கொடுக்கபடுகிறது-
வாட்களால் தாக்க!

ஆயுதம் தரித்தவர்களை-
எதிர்க்க!

நரம்புகளை தரிக்க!''

எனக்கென்னமோ-
விபரீதம் என உணர்கிறேன்!

அப்பயிற்சியில்-
தங்களது மெய்க்காப்பாளரும் கலந்துள்ளார்கள்-
ஆதலால-
அச்சமடைந்துள்ளேன்!''

கொட்டி தீர்த்தார்-
சேதுபத்திரர்!

மன்னரின்-
பதிலுக்காக காத்திருந்தார்!

(தொடரும்....)

6 comments:

  1. இனிய வணக்கம் சகோதரரே...
    நீண்ட நாட்கள் கழித்து இணையம் வருகிறேன்..
    அருமையான வரலாற்றை கவியாக்கித் தருகிறீர்கள்..
    இனிமை..
    எழுத்துக்கள் தெளிவாக தெரியவில்லை..
    எழுத்துக்களின் நிறத்தினை மாற்றினால் நன்றாக இருக்கும்..

    ReplyDelete
  2. மன்னரின் பதிலுக்கு நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. பயிற்சி செய்யச் சொல்லியது மன்னர்தானே..அதைச் சொல்வாரோ?

    ReplyDelete
  4. ஆர்வமுடன் தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  5. மன்னரின் பதிலுக்கு நாங்களும் காத்திருக்கிறோம்.

    ReplyDelete