Tuesday 11 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (26)

மன்னர்!
தொடர்ந்தார்!

''கழுவிலேற்றினோமானால்-
உயர் ஜாதியினரை!

பாவங்களில்-
பெறும்பாவம் என-
பரப்பி இருக்கிறார்கள்-
மக்களிடையே!

ராஜ குருவிற்கு-
எல்லை மீற -
துணிய வைத்தது எது!?

நாட்டின் -
ரகசிய வழிகள்-
தெரிந்திருந்தது!

நமக்கோ-
ரகசிய வழிகள் தெரியவில்லை!

இதில்-
அரசர்கள் படுக்கையறை கூட-
விதிவிலக்கல்ல!

ஆவல் கொண்டோம்-
ரகசிய வழிகளை அறிந்திட!

''மௌன விரத ''நாடகம் நடத்தபட்டது-
வாய்ப்பு அமைந்திட!

ராஜ குருவை வைத்து-
கதவை பூட்டினோம்!

''ரகசிய கதவு'' திறக்கும் -என
நம்பினோம்!

தப்பிச்செல்ல -
வழி செய்தோம்!

''வழி''யறிய -
தந்திரம் செய்தோம்!

மற்றவைகளை-
அத்ஹமை சொல்வார்!''

மன்னர் சொல்லிவிட்டு-
அமர்ந்தார்!

அத்ஹம் எழுந்தார்!

தொடர்ந்தார்!

''அமைச்சர் பெருமக்களே!

மன்னர் பிறந்தநாளன்று-
எனது  உரையை-
நீங்களெல்லாம் அறிந்தவர்களே!

இன்று -
நான் சொல்ல போவது-
அந்நாளைக்கும் முந்தையது!

இனி வருவது!

இந்நாட்டின் -
கரை சேர்வதற்கு முன்னால்!

சுற்றி வளைக்கப்பட்டோம்-
கடற்கொள்ளையர்களால்!

இது போன்ற தாக்குதல்கள்-
எங்களுக்கு சாதாரணம்!

எதிர்தாக்குதல் கொடுத்து-
கைது செய்தோம்-
அனைவரையும்!

கெஞ்சினார்கள்-
கடற்கொள்ளையர்கள்!

செய்ததெல்லாம்-
ராஜ குரு உந்துதலால்-
என்றார்கள்!

மன்னரை -
காவலர்கள் வாயிலாக சந்தித்தோம்!

மன்னர் -
ஆணைக்கிணங்க விடுவித்தோம்!

வியாபாரத்தை-
ஒதுக்கினோம்!

மன்னர்  வேண்டுகோளினால்-
நாட்டிலுள்ள சதிகளையறிய-
நேரம் ஒதுக்கினோம்!

உள்ளன-
கடற்கரை சத்திரத்திலிருந்தும்-
அரண்மனைக்கு ரகசிய வழிகள்!

அவ்வழிகளை-
கண்காணிப்பதற்காகவே விழித்திருந்தது-
எங்களது கண்கள்!

அதில்-
மன்னரை தாக்க வந்த-
கொலைகாரர்களை தடுத்தோம்!

ராஜ குருவின் -
மன்மத அசிங்கங்களையும் அறிந்தோம்!

''சொர்க்க வாசல்'' மட்டும்-
எங்களுக்கு பிடிபடவில்லை!

அதனால்-
விஷ்ணுபட்டரை தப்பவைக்க வேண்டிய-
நிலை!

தப்பியவர்-
ராஜ குருவை சந்தித்தார்!

ராஜ குருவும்-
வைர , வைடூரியங்களுடன்-
தப்பிக்க முனைந்தார்!

இருவரும்-
கடல் வழி தப்பிக்க முனைந்தார்கள்!

நாம் -
விரித்த வலையில் விழுந்தார்கள்!

அதஹமின் -
விளக்கவுரை நிறைவு பெற்றது!

ஓரிரு அமைச்சர்களை தவிர்த்து!

மற்றவர்களுக்கு-
''இவ்வளவு நடந்ததா..!?''-என
பிரமிப்பே வியாபித்தது!

''ரகசியங்களை-
கசிய விடாதீர்கள்!

மக்களுக்கு -
சஞ்சலத்தை உண்டாக்கிவிடாதீர்கள்!

இண்ணும் -
''வேட்டை ''முடியவில்லை!

சொல்லிவிட்டு கலைத்தார்-
அமைச்சரவையை!

''அத்ஹம்...!!''-
மன்னரின் குரலழைத்தது!

அதில்-
''தேடலொன்று'' இருந்தது!

(தொடரும்....!!)






5 comments:

  1. சுவாரஸ்யம்... தேடலை தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. எவ்வளவு நடந்திருக்கிறது!!!

    ReplyDelete
  3. அதஹமின் -விளக்கவுரை வியக்கவைத்தது..!

    ReplyDelete
  4. தேடலைத் தெரிந்து கொள்ள நானும் தொடர்கிறேன்.

    ReplyDelete