Monday 24 February 2014

பிறந்த பூமி !(4)

போர்க்கப்பல் வந்தடைந்தது-
லிபிய தலைநகர துறைமுகத்திற்கு!

முக்கிய போர்ப்படை தளபதி கிராசியானிக்கு!

வரவேற்பு நடத்தப்பட்டது பெயரளவிற்கு!

புதிய கவனர் என்றே சொல்லப்பட்டது வெளி உலகிற்கு!

கிராசியானி அரசு இயந்திரங்களை முடுக்கினார்!

உமர் முக்தார் என பெயர்களுடையவர்களின் சரித்திரங்களை அலசினார்!

''அதில்-
ஒரு உமர் முக்தார்!

எழுபத்திரண்டு வயதுடைய முதியவர்!

குர் ஆன் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்!

ஏழைக்குழந்தைகள் அவரது மாணாக்கர்கள்!

நிழல்தரும் மரங்கள் அவரது பள்ளி வளாகங்கள்!

மலிவான மூக்கு கண்ணாடி!

வயோதிகத்தின் காரணத்தால் நடை இருக்கும் சற்று தள்ளாடி!

அவருக்கென்று சொத்துக்களில்லை!

அவரை மதிக்காத மக்களை காண்பது அரிதான நிலை!''

ஜெனரல்/கவர்னர் கிராசியானி-
தலை சொரிந்தார்!

சந்தேகக்கண் -
யாருமீதும் பதிக்க முடியாமல்-
தவித்தார்!

நடத்தப்பட்டது-
அவசர ஆலோசனை!

ஆனால்-
உண்மையில் அது சதியாலோசனை!

ஆயுதம் தாங்கிய படை கிளம்பியது!

''அஜிஸியா'' கிராமத்தையடைந்தது!

மத யானைகூட்டம் ஒன்று-
விவாசாய நிலத்தில் புகுந்தது!

கிடைத்தையெல்லாம்-
துவம்சம் செய்தது!

முதியவர்கள் சுடப்பட்டார்கள்!

மூதாட்டிகள் சுடப்பட்டார்கள்!

சிறுவர்கள் சல்லடையாக்கப்பட்டார்கள்!

எதிர்த்து வரும் ஆண்களை கைது செய்வதாக திட்டம்!

அவர்களை சித்திரவதைக்குள்ளக்கி ''உமர் முக்தாரை''அறிந்திட நோக்கம்!

யாரும் வரவில்லை!
கிளம்புவதை தவிர வேறு வழியில்லை!

கண்களுக்கு லட்சணமான பெண்கள்!
ராணுவத்தினர் கண்களுக்கு உறுத்தலானார்கள்!

இளம்பெண்கள் வாகனத்திலேற்றினார்கள்!

வெற்றி களிப்பில் கிளம்பினார்கள்!

படை மலைக்குன்றுகளுக்கிடையில் சென்றது!

கடும் இருளாக இருந்தது!

கிராசியானி-
படையை எதிர்ப்பார்த்திருந்தார்!

கடிகார முள்ளை இமை கொட்டாமல் பார்த்திருந்தார்!

நேரம்தான் கடந்தது!

படை திரும்பியதற்கு அறிகுறி இல்லாதிருந்தது!

சிறு படை ஏற்படுத்தினார்!
இடத்தை நோக்கி பயணித்தார்!

வந்துவிட்டார்-
குன்றுகளுக்கிடையில்!

உறைந்தே போனார்-
அதிர்ச்சியில்!

கிராசியானிக்கு விழுந்த-
முதல் அடி!

அவர் நம்பிக்கையில் விழுந்த-
பேரிடி!

(தொடரும்...!!)

4 comments: