Thursday 27 February 2014

பிறந்த பூமி !(7)

''மேன்மைதாங்கி அதிபர் அவர்களே!

தற்கொலை செய்துக்கொள்ள நினைத்தேன்!

தரமில்லாத என்னை நியமித்ததால், உங்களை உலகம் தூற்றுமே என்றுதான் தவிர்த்தேன்!

அதிபர் அவர்களே!

தரைப்படையிலும்-
மலையேற்றத்திலும்-
நம் வீரர்கள் சூரர்கள்!

ஆனால்-
 பாலைவனத்திலோ புதியவர்கள்!

வீரர்களுக்கு தேவை-
பாலைவன பயிற்சி!

இது நடந்தால்-
பாலைவனமெங்கும் நமது ஆட்சி!''

சொல்லி முடித்தார் கிராசியானி!

மௌனித்து இருந்தார் முசோலினி!

கோபம் தணிந்திருந்தது!

கேள்விபுலன்களுக்கு கதவு திறந்தது!

''ம் ம்..''சரி!
அவகாசம் அளிக்கிறேன்!

வெற்றி பெற வாழ்த்துகிறேன்!

அனுமதித்தார் முசோலினி!


விடைபெற்றார் கிராசியானி!

லிபியாவிற்கு பயணம்!

அங்கு-
 ஆபத்து சூழ்ந்திருந்த தருணம்!

இறங்கியதும்-
முதல் தகவல்!

ஆயுத கிடங்கை அள்ளி சென்றுவிட்டார்கள்-
போராட்டக்காரர்கள்!

கிராசியானி-
காயம்பட்டவர்களை சந்தித்தார்!

துப்பு கிடைக்கமா.!?-என
விசாரித்தார்!

அனைவரும் இருந்துள்ளார்கள்-
முகத்தை மூடி!

ஒருவருக்கு மட்டும்-
வெள்ளையான புருவ முடி!

தலைமையாக இருந்தவர்-
இரக்கமுள்ளவர்!

காயம்பட்ட -
எவரையும் சுட அனுமதிக்காதவர்!

இதனைதான் அறிய முடிந்தது!

ஜெனரலால் அவசர கூட்டம் நடத்தப்பட்டது!

''இத்தாலிக்கு செய்தி சென்றுள்ளது!

ஆயுதங்களும் , படைகளும் வரவுள்ளது!

வரும்வரை-
மக்களிடம் எல்லைமீற கூடாது-
அதுவரை!

மக்களுடன் -
போராட்டக்காரர்களும் சேர்ந்து கைப்பற்றிடலாம்-
தலைநகரை!

ஆராய்ந்தோம்-
சேகரித்திருந்த -
''உமர் முக்தார்கள்''தகவல்களை !

அதில்-
விசாரிக்கவேண்டும்-
ஒன்பது பேர்களை!

அழைத்து வாருங்கள்!

வர மறுத்தால் விட்டுவிடுங்கள்!

மறுப்பவர் நடவடிக்கையை கவனியுங்கள்!

மக்களுக்கு சந்தேகம் வரக்கூடாது!

நமக்கு ஆபத்தாகிட கூடாது!''

சொல்லி முடித்தார் ஜெனரல்!

மறு நாள்!

ஒன்பது பேரில் -
வந்தது எட்டு நபர்கள்!

( தொடரும்...!!)




4 comments:

  1. மற்ற ஒருத்தர் என்ன ஆனார்...?

    ReplyDelete
  2. ஓ முக்கியமானவர் வந்தாரா வரவில்லையா?

    ReplyDelete
  3. மற்ற ஒருவர் யார்..... அவர் தானா?????

    இல்லை முக்கியமானவர் வந்து விட்டாரா?

    தொடர்கிறேன்.

    ReplyDelete
  4. சுவாரஸ்யம் கூடுகிறது!

    ReplyDelete