Friday 28 February 2014

பிறந்த பூமி !(8)

கிராசியானி உத்தரவிட்டார்!

''வராத நபரை'' அழைத்து வர சொன்னார்!

ஒருவர் சென்றார்!

திரும்பி வந்தார்!

''ஜெனரல் அவர்களே!

வராதவர்-
ஏழை இமாம் அவர்களே!

குளிரில் நடுங்கி கிடக்கிறார்!

வயோதிகத்தினால் வாடி கிடக்கிறார்!

நலம் பெற்றதும் வருவாராம்!''

சொல்லி முடித்தார்!

கிராசியானி வழியில்லாமல் தலையசைத்தார்!

வந்த உமர் முக்தார்கள்-
விசாரிக்கப்பட்டார்கள்!

காயம்பட்ட வீரனால்-
மறைந்துக்கொண்டு-
கண்காணிக்கப்பட்டார்கள்!

யாரும் இல்லை!

தாக்க வந்தவராக அறியமுடியவில்லை!

விசாரணை முடிந்தது!

வெளியேற கதவுகள் திறந்தது!

மறு நாள்-
ஜெனரலின் அறிக்கைகள்!

தாங்கி வந்தது-
பத்திரிக்கைகள்!

''லிபியாவின் பிரஜைகளே!
அமைதிக்கு உடன்படுங்களேன்!

அதிபர் முசோலினி அவர்கள்-
கொஞ்சம் கொஞ்சமாக அதிகாரம் தந்திடுவார்!

நீங்களே நாட்டை ஆண்டிட அனுமதிப்பார்!

போராட்டக்காரர்கள் பேச்சுவார்த்தைக்கு வரவும்!

நாட்டில் அமைதி ஏற்பட உடன்படவும்''

அறிக்கை சொல்லிவிட்டது!

சுதந்திரம் கிடைத்து விட்டதாகவே-
நாடே மகிழ்வானது!

நாட்கள் கடந்தது!

போராட்டக்காரர்களிடமிருந்து பதில் வராதிருந்தது!

பதில் வராததால் கிராசியானிக்கு சந்தோசம்!

மக்கள் போராட்டக்காரர்களை ஒதுக்கிடுவார்கள்-
காட்டிக்கொடுப்பார்கள் என்ற எண்ணம்!

அவர் எண்ணத்தில் மண் விழுந்தது!

மறுநாள் பத்திரிக்கையில் போராட்டக்காரர்கள் பதில் வந்தது!

''பேச்சு வார்த்தைக்கு உடன்படுகிறோம்!
சில நிபந்தனைகள் முன் வைக்கிறோம்!

பேச்சு வார்த்தை இடத்தில் கட்டிடங்கள் கூடாது!

திறந்தவெளி பாலைவனமே சிறந்தது!

கலந்துக்கொள்ள வேண்டியது-
உங்களில் மூவர்!
எங்களில் மூவர்!

உங்கள் உயிருக்கு நாங்கள் பொறுப்பு!
எங்கள் உயிருக்கு நீங்களே பொறுப்பு!

தற்காப்பிற்கு மட்டும் துப்பாக்கி கொண்டு வரலாம்!

தகிடுதத்தங்கள் செய்ய வேண்டாம்!

அரசு சேராத லிபிய பிரஜையொருவரை நியமிக்கவும்!

அவரிடம் பதிலனுப்பவும்''!

கிராசியானிக்கு தூக்கி போட்டது!

பதிலை அவர் எதிர்பார்க்காதது!

ஆயதங்கள் வரும்வரை -
நடத்த வேண்டிய நாடகம் இது!

பதில் வந்ததால் தவிர்க்க முடியாது போனது!

தலைநகர் திரிபோலி தலைமை இமாம்!

தகவல் பரிமாற்றத்திற்கான இடம்!

சந்திக்கும் இடத்தை எழுதி அனுப்பபட்டது!

ரகசியமாக கண்காணிக்க ஆட்களும் அனுப்பபட்டது!

போராட்டக்காரர்களிடமிருந்து பதில் வந்தது!

''சந்திப்போம்-
குறிப்பிட்ட இடத்திலும்!
குறிப்பிட்ட நேரத்திலும்!

படித்துக்கொண்டிருந்த கிராசியானி!
கண்களை விரித்தார் அதிர்ச்சியாகி!

கடித கடைசி வரியொன்று!

''இமாமை கண்காணித்ததுபோல்,எங்களை கண்காணிக்க வேண்டாம்''-என்று!

(தொடரும்...!!)


4 comments:

  1. அட... கண்காணிக்கிறார்கள் என்று எப்படியோ கண்டுபிடித்து விட்டார்கள்...

    ReplyDelete
  2. திறமை சாலிகள் அல்லவா.... அதான் கண்டுபிடித்துவிட்டார்கள்.....

    காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு.....

    ReplyDelete
  3. கலக்கல்! தொடர்கிறேன்!

    ReplyDelete