Monday 17 March 2014

பிறந்த பூமி !(25)

சப்தம் வந்த திசையை -
கிராசியானி திரும்பி பார்த்தார்!

உமர், கையின் சைகையால் அழைத்தார்!

''என்ன விஷயம்..!? மிகுந்த சிரமத்துடன் கேட்டார்!

''ஒரு உதவி வேண்டும்...!!-
கிராசியானி இழுத்தார்!

''ஒரு கைதியிடம் உதவியா...!?-
உமர் கேட்டார்!

''உமர் அவர்களே!
தீவிரவாதிகள் , பயங்கரவாதிகள் என்றே உங்களை நினைத்தேன் -
உங்களை சந்திப்பதற்கு முன்!

தலைகீழ் மாற்றமானேன்-
பாலைவன சந்திப்பிற்கு பின்!

படைகளை நான் வர சொன்னதால்!

படையுடன் பயணிக்க வேண்டியாதானது நிர்பந்ததால்!

கிராசியானி தொடர்ந்தார்!

''இதை ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்..!?
உமர் இடைமறித்தார்!

''நீங்கள் இந்நாட்டிற்காக போராடுகிறீர்கள்!
இந்நாட்டு மக்களால் மதிக்கபடுகிறீர்கள்!

உங்களை கைது செய்த பிறகு!
நாடெங்கும் படர்ந்துவிட்டது கலவர நெருப்பு!

சமாதானத்தையே நான் விரும்புகிறேன்!
முசோலினி நிலைப்பாட்டிற்கு எதிராகவே செயல்படுகிறேன்!

வன்முறையை நிறுத்த சொல்லுங்கள்!
ராணுவ நடவடிக்கையெடுத்தால் இருபக்கமும் சேதாரங்கள்!''

கிராசியானி சொன்னார்!

உமர் ஆழ்ந்து சிந்தித்தார்!

''நான் பேசுவதை மக்கள்,உங்கள் நிர்பந்ததால் என எண்ணிடுவார்களே....!?-
உமர் கேட்டார்!

''இல்லை!
போராளிகள் தேடலை நிறுத்தி விட்டேன்!
உங்களுடன் கைதானவர்களை விடுதலை செய்ய போகிறேன்!

உங்களுக்காக முசோலினியை சந்திக்கவுள்ளேன்!
அவர்அதிபர் என்பதைவிட என் பால்ய சிநேகிதன்!

உங்களை நீதிமன்றத்தின் வாயிலாக வெளியேற்றுவேன்!

முடிந்தவரை முயற்சிப்பேன்!
பேச்சுவார்த்தைக்கு வழி வகுப்பேன்!''
கிராசியானி சொன்னார்!

உமர் சீர்தூக்கி பார்த்தார்!
சரி என்றார்!
நண்பர்களை சந்திக்கவேண்டும் என்றார்!

நண்பர்கள் வந்தனர்!
கிராசியானி வெளியே சென்றார்!

நண்பர்கள் சிறையில் நடந்த மாற்றங்களை சொன்னார்கள்!

பதிலுக்காக, உமர் முக்தாரையே பார்த்தார்கள்!

உமர் உத்தரவிட்டார்!

''வெளியில் நடக்கவேண்டியது என்ன!?என்ன!?
நடக்க கூடாதது என்ன!?என்ன!?

சொல்லி முடித்தார்!

நண்பர்கள் விடுதலையாவதால் மனம் மகிழ்ந்தார்!

நண்பர்கள் கலைந்தனர்!
கனத்த இதயத்துடன் சென்றனர்!

நாடெங்கும் ஒரே செய்தி!

உமர் பேச போகும் வானொலி செய்தி!

இனிப்பு பலகாரங்களை மொய்க்கும் ஈக்களை போல!

மழலைகள் பேசும் மொழியால் நெஞ்சில் தோன்றும் சந்தோசங்களை போல!

தேசமெங்கும் வானொலிபெட்டிகள் முன் மக்கள் கூடினர் அலை போல!

உமர் பேட்டியினால் -
''கொளுந்துவிட்டு எரிவதை அணைப்பாரா..!?

இன்னும் எரிய 'கொளுத்தி''போடுவாரா..!?

(தொடரும்....!!)

4 comments:

  1. இன்னும் என்ன நடக்குமோ...?

    ReplyDelete
  2. அடுத்த என்ன நடக்கப்போகிறதோ....

    ம்ம்ம்ம்... தொடர்கிறேன்.

    ReplyDelete
  3. மக்கள் வானொலி முன்..
    நாங்கள் உங்கள் பதிவைப் படித்து நடந்ததை அறிய கணினி முன்..

    ReplyDelete
  4. நல்லதே நடக்கட்டும்! நன்றி!

    ReplyDelete