Sunday 30 March 2014

பிறந்த பூமி !(38)

பால்காரர் முகமன் கூறினார்!

பாத்திமா பதில் முகமன் கூறினார்!

முக்தார் அலியை சந்திக்கனும் என்றார்!

பாத்திமா வழி விட்டார்!

கடிதமொன்றை அலியிடம் கொடுத்தார்!

பால்காரர் நடையை கட்டினார்!

கடிதம் சொன்ன தகவல்!

விழாவில் கலந்துக்கொள்ளவும்!

நீதிபதிளை விட்டு தள்ளி இருக்கவும்!

அலி குழம்பிப்போனார்!

அனுமதிதான் கிடைத்து விட்டதே- என கிளம்பினார்!

விழா ஆரம்பமானது!

உமருக்கு தண்டனையளித்த -
நீதிபதிகளுக்கு பாராட்டுக்கள் குவிந்தது!

முக்தார் அலி பேச அழைக்கப்பட்டார்!

பேச ஆரம்பித்தார்!

''நான் பல போராட்டங்கள் மத்தியில் உமரை கைது செய்தேன்!

நீதி வேண்டி நிறுத்தினேன்!

அநீதி அங்கே நீதியாக கண்டேன்!

இத்தாலியர்கள் நீதியில் கரும்புள்ளி விழுந்து விட்டது!

நீதிபதி குரல் குறுக்கிட்டது!

''உனக்கென்ன..!.?பைத்தியமா...!?என
குரலெழுந்தது!

கைது செய்ய சொல்லி ஆணை பிறபிக்கப்பட்டது!

அந்த கணம்!

மரண ஓலம்!

மூன்று நீதிபதிகளானவர்கள்!
ரத்தச்சகதியானார்கள்!

முக்தார் அலி திகைத்துப்போனார்!

கூட்டத்தினர்  விழுந்தடித்து ஓடினர்!

அனைவரும் மடக்கப்பட்டார்கள்!

விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்கள்!

அலிக்கு தெரியும் சுட்டது யாரென்று!

கூட்டத்தில் இருந்தது அவருக்கு தெரிந்த முகமொன்று!

''தெரிந்த முகம்தான்''சுட்டது!

அம்முகம்-
ஒரே நொடியில் துப்பாக்கியை காலின் கீழ் போட்டு  தள்ளிவிட்டது!

நீதிபதிகளை காப்பாற்றுவதுபோல் நடித்து வெளியேறி விட்டது!

அம்முகம் அலிக்கும் நமக்கும் தெரிந்தவர்தான்!

அவர் தோட்டக்காரர் ஹுசைன்தான்!

புதிய கவர்னர் -
முக்தார் அலியின் கையை பிடித்தார்!

''எனக்கு உதவுங்கள்!
அரபிகளிடமிருந்து தற்காக்க ஆலோசனை சொல்லுங்கள்!-என
கெஞ்சினார்!

அலி வேறு வழியின்றி சம்மதித்தார்!

இரவு பத்து மணி சந்திக்கத்திட்டம்!

அலியின் மனதிலோ சம்பவத்தின் எண்ண ஓட்டம்!

அலி வீட்டிற்கு வந்தார்!

எதிரே பாத்திமா வந்தார்!

''உங்களை காண ஒருவர்  நெடுநேரமாக காத்துக்கொண்டிருக்கிறார்!- என பாத்திமா சொன்னார்!

''யார் அவர்..!?-
அலி கேட்டார்!

''அவர் நம்மிடம் வேலைப்பார்த்த ஹஸன்!''-என பாத்திமா பதிலளித்தார்!

(தொடரும்...!!)

4 comments:

  1. ஹஸன் என்ன சொல்லப்போகிறாரோ...?

    ReplyDelete
  2. ஹுசைன் என்ன சொல்லப் போகிறார்..... நானும் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. விறுவிறுப்பாக செல்கிறது! தொடர்கிறேன்!

    ReplyDelete