Monday 31 March 2014

பிறந்த பூமி !(39)

முக்தார் அலி வரவேற்பறை வந்தார்!

ஹஸன்,அலியை கண்டதும் எழுந்தார்!

அலியோ ''நீங்களும்,நானும் '' சமம் என்றார்!

ஹஸன் தொடர்ந்தார்!

''இல்லை! எப்போதும்போலவே என்னை நடத்துங்கள்!

அதுவே நாம் சந்திப்பதற்கு அமையும்,ஏதுவான தருணங்கள்!

''நீதிபதிகளை சுட்டதற்கான காரணங்கள்!

உமர் அவர்களை விசாரிக்க வரவில்லை அந்நீதிபதிகள்!

தூக்கிலிட உத்திரவு பிறப்பிக்கவே வந்துள்ளார்கள்!

உங்களையும் கைது செய்ய திட்டமிட்டுள்ளார்கள்!

இவைகளை அவர்களே போதையில் உளறியவைகள்!

தலைமைக்கு இத்தகவல் உறுதியானது!

சுட சொல்லி உத்திவிடப்பட்டது!

சுட்டதை நீங்கள் பார்த்தீர்கள்!

வேறு சிலரும் பார்த்திருப்பார்கள்!

நான் தலைமறைவாக உள்ளேன்!

இதனை விளக்கவே இங்கு வந்தேன்!''

ஹஸன் முடித்தார்!

அலியோ ,அல்கரீமியை சந்திக்க ஏற்பாடு செய்திட வேண்டும் என்றார்!

சந்தித்தனர்!
அலியும்!
அல்கரீமியும்!

''நான் முசோலினியை சந்திக்க செல்லவுள்ளேன்!

சமாதான பேச்சுவார்த்தைக்கு முயலப்போகிறேன்!

எனது மனைவியையும் ,இரு பிள்ளைகளையும் பாதுகாக்குமாறு வேண்டுகிறேன்!''

அலி சொன்னார்!

கரீமி தொடர்ந்தார்!

''இத்தாலி சென்று வாருங்கள்!

அதற்கு முன் தலைவரை(உமர்) சந்தித்து செல்லுங்கள்!''

அலியும்!
கரீமியும்!
கலைந்தனர்!

அலி ,புதிய கவர்னரை சந்தித்தார்!

அவரோ,சடலங்களை விமானத்திற்கு அனுப்பிக்கொண்டிருந்தார்!

''கவர்னர் அவர்களே!
நானும் இத்தாலி வர போகிறேன்!

மாட்சிமை தாங்கி முசோலினி அவர்களை சந்திக்க வருகிறேன்!

லிபியா விவகாரத்தை விவரிக்கப்போகிறேன்!''

அதற்கு முன் உமரை சந்திக்க உள்ளேன்!

அவரது நண்பர்கள் அராஜகத்தைச்சொல்லி மன்னிப்புக்கடிதம் வேண்டிடப்போகிறேன்!'' என அலி சொன்னார்!

கவர்னரோ மட்டற்ற மகிழ்ச்சிக்கொண்டார்!

கிராசியானி வந்தால்,ஒரு வேளை நமக்கு பதிலாக இவர் கவர்னராக நியமிக்கப்படலாம்!

நாம் லிபியாவிற்கு வராமல் இருந்திடலாம்''-என உள்ளூர மகிழ்ந்தார்!

உமரை சந்திக்க சம்மதித்தார்!

அலி சிறை நோக்கி பயணமானார்!

லிபியா இப்படியான நிலவரம்!

இத்தாலியிலோ சூழல் வேறுவிதம்!

(தொடரும்...!!)

3 comments: