என் மழலைக்கும் -
என் மணாளிக்கும்!
என் தாயிக்கும்-
என் தாயின்-
சேயான எனக்கும்!
உறவினர்களுக்கும்-
உறவுகளின் உயிரின்-
உருவங்களுக்கும்!
இன்னும் -
எத்தனையோ -
பேர்களுக்கும்!
இத்தனை என -
கணக்கிட
முடியாதவங்களுக்கும் !
தாயாக-
நீ-
வளர்த்தாய்!
மாரோடு-
சாய்த்து-
கொண்டாய்!
இத்தனை பேருக்கும் -
நீ தாயா!?
இல்லையே!
பெத்தால்தான்-
தாயா!?
பெத்தது எல்லாம்-
பிள்ளையா!?
உன் வயிதுலதான்-
ஒரு கரு வளரலையோ!?
முன்னமே அந்த -
நல்லவர்கள்-
பிறந்து விட்டார்களோ!?
விதைகள் -
வளரும்வரை-
தேவை-
வேலிகள்!
வளர்ந்த-
விதைகள்!
வேலிகளை-
ஒதுக்குவதா-
முறைகள் !?
தொலை பேசியில்
பேசுகையிலே
உனக்கு -
கேளாமலோ !
எனக்கு
புரியாமலோ !
கலங்கி உள்ளேன்!
மனம் புழுங்கி உள்ளேன்!
விலைவாசி ஏத்தி
'வாக்கரிசி ' போட்டாங்க!
இதை சாதனை என -
விளம்பரம் போடுறாங்க!
விளம்பரத்துக்கு செலவு-
இருபத்தஞ்சி கோடியில!
மக்களோ -
பிச்சை எடுக்குற -
நிலையில!
நீயோ-
கற்களை-
கட்டிடங்கள் ஆக்கினாய்!
அதன் நிழலில் -
கூட இளைப்பாற-
மறுக்கிறாய்!
உனக்கு நான்-
என்ன கைம்மாறு-
செஞ்சு இருப்பேன்!?
உன் காதுல-
'அலுக்கதா'தொங்கி -
இருந்தா சந்தோசம்-
அடைந்து இருப்பேன்!
அலுக்கத்து- காதுல தொங்கும் வளையம்!
[இந்த கவிதை ஆச்சா கமிதா அவர்களுக்கும்-
உலகில் உள்ள பாட்டிமார்களுக்கும் அர்ப்பணம்]
Friday, 1 June 2012
Wednesday, 30 May 2012
'பொது' கிணறு....
அதிகாலை-
'வயசு'புள்ளைகளுக்கு!
காலை-
வேளை-
பள்ளி புள்ளைகளுக்கு!
அதுக்கு பின்னே -
தாய் மார்களுக்கு!
முற்பகளுக்கு மேல்-
காலை' வேலை-'
போய் திரும்பியவர்களுக்கு!
மாலை -
வயது முதிர்ந்தவர்களுக்கு!
காலை நேர-
கால அட்டவணையே!
மறு பாகமும்-
தொடருமே!
'தேவைகளை-
தீர்த்திடும்-
கிணறுகள்!
அதில் அசுத்தம்-
செய்வதுதான்-
மனித புத்திகள்!
ஓட்டை வாளியோ-
உடையாத வாளியோ-
மறுக்காம -
தண்ணி கொடுக்கும்-
கிணறுகள்!
பணக்காரனோ-
ஏழையோ-
அவன் செய்யும்-
நற்செயலை கொண்டே-
மனதில்-நிற்பார்கள்!
தண்ணீர் வரும்-
ஊத்துகள்!
அதை விட-
கண்ணீர் விடும்-
காஷ்மீர் மக்கள்!
கோடையில்-
மக்கள் கூடும்-
இடம்!
மழை காலங்களில்-
நாம் மறந்த-
இடம்!
'தேவைக்கு'-
திரும்பிவரும்போது-
'கடுப்பு'அடிப்பதில்லை-
கிணறுகள்-
நம்மிடம்!
பென்சனுக்கு-
நடந்து நடந்து-
தேஞ்ச தியாகிகள்-
உண்டு!
அலையவிடும்-
அரசு அதிகாரிகளும்-
உண்டு!
அள்ள அள்ள-
ஊறும்-
'கிணறுதான்'-
உண்டு!
நெடுதூரம்-
தெரியும்-
கடலில் உப்புண்டு!
கண்ணுக்கே தெரியாத-
மண்ணுக்குள் -
குடி நீர்-
இருப்பதுண்டு!
அது போலதானோ-
சோகங்கள்-
சுழட்டி அடித்தாலும்-
லட்சியம் கொண்டவன் -
மட்டும்-'இலக்கை'-
அடைகிறானோ!?
Monday, 28 May 2012
கூட்டு குடும்பம்!
கூட்டு பொரியல்-
உணவுக்கு சுவை-
கூட்டும்!
கூட்டு குடும்பமே-
சந்தோசத்தை -
கூட்டும்!
--------------------------
சொன்னாங்க-
கூடி வாழ்ந்தால்-
கோடி நன்மை!
நடப்பதிங்கே-
'கோடிகளால்'-
பிளவுபடும்-
கொடுமை!
-------------------------------------
வண்டி இழுக்கும்-
ஜோடி மாடுகள்!
தாயும்-
தந்தையும்!
கழண்டிடாமல்-
காக்கும் அச்சாணிகள்-
ஆச்சாவும்(பாட்டி)
அப்பாவும்(தாத்தா!)!
பயணிக்கும் -
கூழங்கள்-
பெற்ற பிள்ளைகள்!
இன்றைய -
தலை முறையோ-?
தடை என எண்ணி-
அச்சானிகளை கழட்டுவது-
போல!
மூத்தவர்களை-
ஒதுக்குகிறோம் -
குப்பையை போல!
அவசர கதியில் -
'வேகமாக'செல்ல!
பெற்றவர்களை-
முனைகிறோம்-
முதியோர் இல்லத்தில்-
தள்ள!
ஆம் -
இன்று நாம்-
இருக்கிறோம்-!
அரசு கண்டுக்காத -
வரலாற்று சின்னங்களை-
போல!
உறவுகள்-
'இருந்தும்' -
'இல்லாதது 'போல்-
அலைகிறோம்-
நாதியற்றவர்களாக!
--------------------------------------
விவகாரத்தும்-
கொலைகளும்-
நடப்பது அதிகம்-
தனி குடித்தனத்தில்-
உளவியல் உண்மை!
காரணம்-
கருத்துவேறுப்படும்போதும்-
'கடமை'தவறும்போதும்-
கட்டு படுத்த-
மூத்தவர்கள் இல்லாததே-
பேருண்மை!
-----------------------------------
Saturday, 26 May 2012
கல்யாணம்!
விசேசமானது!
இல்லாதவர்களுக்கு-
விஷமானது!
'புரிந்து'வாழ்ந்தால்-
வம்சம்-
விருட்சமாகும்!
'பிரிந்து 'வாழ்ந்தால்-
தலை முறை-
விரயமாகும்!
-------------------------
மங்களகரமானது!
'மங்கலங்கள்'-
'கரை'ஏற-
'லகரங்கள்-
'செலவாகுது!
----------------------------
ஆட்டம்-
பாட்டம்!
குடி!
கூத்து!
அலங்கோலம்!
கேவலம்!
கல்யாணம்!
நல்ல காரியம்-
கல்யாணங்கள் !
நடை முறை -
என்னவென்றால்-
நடந்தேறும் -
அவலங்கள்!
-------------------------
மனங்களின்-
சங்கம ஒப்பந்தம் -
கல்யாண முறை!
'கறி-
'சின்னதானதால்-
'பங்கம் 'விளைவிக்கும்-
உறவின் முறை!
--------------------------------------
உயிருக்கு உயிரான-
காதல் என்பான்!
ஊரு விட்டு-
ஊரு போய்-
கல்யாணம்-
செய்வான்!
சமாதானம் ஆகி-
வீட்டில்' சேர்த்தால்'-
கைக்கூலி கேட்டு-
நச்சரிக்கிறான்!
---------------------------
வில்லை ஒடித்து-
கரம் பிடித்தான்-
புராணம்!
மாமனார் குறுக்கை-
வரதட்சணையால்-
ஒடிப்பது-
கலிகாலம்!
------------------------
கல்யாண வீட்டுக்காரனுக்கு-
பெரும் செலவு!
அதில்-
மது கடைக்கே-
பெரும்பங்கு!
இதுவா!?
நாட்டுக்காக -
உயிரை கொடுத்தவர்களின்-
கனவு!?
-----------------------
Wednesday, 23 May 2012
'முடிவுக்கு '-முன் ...
முறுக்கேறிய -
தேகம்!
முடக்கிய-
வாதம்!
பலம் இழக்கும்-
செல்கள்!
செல்லரிக்கும்-
உடல்கள்!
வாழ்ந்த வருடங்கள்-
எத்தனை என்பதல்ல-
முக்கியம்!
வாழ்ந்த காலத்தில்
என்ன செய்தோம் என்பதே-
முக்கியம்!
வரலாறு ஒன்னு-
இருக்கு!
நாறிடவா -
நம் செயல்பாடு-
இப்படி இருக்கு!?
சுக போகங்களில் -
முங்கி திளைக்கிறோம்!
ஒரு 'ஓலை'பாயில்-
சுருண்டிட -
இருக்கிறோம்!
விளைஞ்ச கதிர்கள் -
அழகு மணிகள்!
அடித்து எடுத்தால் -
நெல்மணிகள் !
அடிபட்ட நெல்கள் -
பசியாத்துது !
கழிவான-
வைக்கோல்கள்-
கால்நடை களுக்கு -
இரையாகுது!
மனிதா!-
நம்மால் -
மற்ற மனிதனுக்கு-
பிரயோசனம் இருக்குது!?
நாம்-
சோத்துக்கு தண்டமா!?
பூமிக்குத்தான் -
பாரமா!?
சுனாமி காலத்தில்-
பல நூறு உயிர்கள் -
இழந்ததில் உலகமே-
அதிர்ந்தது!
ஒரு உண்மை தலைவன்-
'தவறி'விட்டாலோ -
அகிலமே கலங்குது !
'எண்ணி ' பார்க்கும் -
பணங்களை விட !
'எண்ணி ' பார்க்க வேண்டும் -
என்ன அர்த்தம் இருக்கு!?-
நம் வாழ்வினூடே!?
Tuesday, 22 May 2012
எல்லா புகழும் இறைவனுக்கு-3

என்ன செய்தேன்!
என்- எண்ணங்களை
சொன்னேன்!
பயந்ததுண்டு-
யாரிடமும் பேசிட!
பரிதவித்ததுண்டு
யாராவது- எதனையாவது
சொல்லிட!
கடுப்பானவர்கள் உண்டு-
நான் கவிதை-
எழுதுவதாக-
கேள்விப்பட்டிட!
எங்கோ பிறந்த-
வண்டுகள்-
மகசூல்-
ஏற்படுத்துது!
எங்கெங்கோ
பிறந்த நாம்-(பதிவர்கள்)
எழுதிட தூண்டுகிறோம்-
விருது கொடுத்து!
கொட்டும் மழை
அடையாளம் காணப் படுது!
அது விழும்-
இடத்தைக் கொண்டு!
கழிவில் விழுந்தால்-
கழிவு நீர்!
விளைநிலத்தில் விழுந்தால்-
விளையும் நெல்!
அதுபோலத்தானோ-
மனிதன் வாழ்வோ!?
ஒவ்வொன்றுக்கும்-
ஒரு நிலை உண்டு!
ஒவ்வொரு மனிதனுக்கும்-
தனி சிறப்புண்டு!
மனிதப் படைப்பின்-
நோக்கத்தை-
அறிந்தவர்கள்-
எத்தனை பேருண்டு!
அறிவோம்!
தெளிவோம்!
நாமும் வாழ்வோம்!
பிறரையும்-
வாழச் செய்வோம்!
விருதளித்த சகோதரி
கலைக்கு-
மிக்க நன்றி!
பகிர விரும்பும்-
உறவுகள் பத்து!
சென்னை பித்தன் அவர்கள்
வசந்த மண்டபம் மகேந்திரன் அவர்கள்
சதக் மஸ்லஹி அவர்கள்
ராஜி அவர்கள்
மனசாட்சி அவர்கள்
மதாஸ் அவர்கள்
சிட்டுக்குருவி அவர்கள்
ஜோஸபின் அவர்கள்
ரிஷ்வன் அவர்கள்
வைரை சதீஷ் அவர்கள்
தோழர்களே..
எழுதுவோம்!
சமூகத்தை-
எழுப்புவோம்!
அன்பு உறவுகளே-
இந்த விருதினைப்
பகிருங்களேன்!
உங்கள் பிடித்தமானவர்களுக்கு!
மற்றவர்களுக்கு
அறிமுகப்படுத்துவதற்கு!
வைரை சதீஷ் அவர்கள்
தோழர்களே..
எழுதுவோம்!
சமூகத்தை-
எழுப்புவோம்!
அன்பு உறவுகளே-
இந்த விருதினைப்
பகிருங்களேன்!
உங்கள் பிடித்தமானவர்களுக்கு!
மற்றவர்களுக்கு
அறிமுகப்படுத்துவதற்கு!
Tuesday, 15 May 2012
பயணத்தினூடே".......
ரைட்ஸ் சகோதரர்கள்-
கனவு-
இரும்பு பறந்திட!
சிறுவயது ஆசை-
விமானத்தில்-
பறந்திட!
எத்தனை-
பறப்பன-
பறக்குது-
கறை உண்டா!?-
வானிலே!
கோடில்லாமல்-
செல்வதுண்டா?-
உலோக பறவை!-
விண்ணிலே!
இதில்தான்-
மாறு படுகிறான்-
படைத்த இறைவனும்!
படைக்கப்பட்ட-
மனிதனும்!
பணம் தேடி!
பகட்டு தேடி!
உள்ளூரில் இழந்த-
கவுரவத்தை -
மீட்க!
வயதுக்கு வந்த-
உடன்பிறந்தவளை-
கரை சேர்க்க!
கனவுகளை-
கொண்டவர்களை-
சுமந்து செல்லுது-
விமான றெக்க!
நாடுகளை கடக்கும்-
விமானத்திற்கு-
தேவை-
வழி காட்டி!(மேப்)
கப்பல் மாலுமிக்கு-
தேவை படுது-
திசைக்காட்டி!
அண்ட சராசரங்களை-
குறிப்பிட்ட கோடில்-
பயணிக்க வைக்க-
நிச்சயம் இருப்பான்-
"ஒரு நிர்வாகி"!
நிலையத்தில்-
குடி நுழைவு-
சோதனை!
சுங்க சாவடி-
சோதனை!
"சோதனைகளை"-
கடந்து செல்லும்-
வெளி நாட்டு-
ஊழியனுக்கு-
வாழ்வே ஆகும்-
வேதனை!
அவனுக்கு-
பணம் வரவாகும்!
இளமை-
செலவாகும்!
எண்ணி விடலாம்-
அவன் அனுப்பும்-
வருமானத்தை!
இழந்திருப்பான்-
எண்ணிலடங்கா-
தன்மானத்தை!
எல்லையில் காவல்-
ராணுவ வீரன்!
குடும்ப மானத்தை-
காக்க போராடுறவன்-
வெளி நாட்டு ஊழியன்!
வீரர்கள்-
சவ பெட்டியில்-
ஊழல்-
"பாரத தீயவர்கள்"!
"தியாகம்" செய்தவர்களை-
மறக்க-
"அத்தீயவர்களை" போலவா!?-
நாம்-
கொடியவர்கள்!,?
(இக்கவிதை அனைத்து வெளிநாட்டு-
ஊழியர்களுக்கு அர்ப்பணம்)
கனவு-
இரும்பு பறந்திட!
சிறுவயது ஆசை-
விமானத்தில்-
பறந்திட!
எத்தனை-
பறப்பன-
பறக்குது-
கறை உண்டா!?-
வானிலே!
கோடில்லாமல்-
செல்வதுண்டா?-
உலோக பறவை!-
விண்ணிலே!
இதில்தான்-
மாறு படுகிறான்-
படைத்த இறைவனும்!
படைக்கப்பட்ட-
மனிதனும்!
பணம் தேடி!
பகட்டு தேடி!
உள்ளூரில் இழந்த-
கவுரவத்தை -
மீட்க!
வயதுக்கு வந்த-
உடன்பிறந்தவளை-
கரை சேர்க்க!
கனவுகளை-
கொண்டவர்களை-
சுமந்து செல்லுது-
விமான றெக்க!
நாடுகளை கடக்கும்-
விமானத்திற்கு-
தேவை-
வழி காட்டி!(மேப்)
கப்பல் மாலுமிக்கு-
தேவை படுது-
திசைக்காட்டி!
அண்ட சராசரங்களை-
குறிப்பிட்ட கோடில்-
பயணிக்க வைக்க-
நிச்சயம் இருப்பான்-
"ஒரு நிர்வாகி"!
நிலையத்தில்-
குடி நுழைவு-
சோதனை!
சுங்க சாவடி-
சோதனை!
"சோதனைகளை"-
கடந்து செல்லும்-
வெளி நாட்டு-
ஊழியனுக்கு-
வாழ்வே ஆகும்-
வேதனை!
அவனுக்கு-
பணம் வரவாகும்!
இளமை-
செலவாகும்!
எண்ணி விடலாம்-
அவன் அனுப்பும்-
வருமானத்தை!
இழந்திருப்பான்-
எண்ணிலடங்கா-
தன்மானத்தை!
எல்லையில் காவல்-
ராணுவ வீரன்!
குடும்ப மானத்தை-
காக்க போராடுறவன்-
வெளி நாட்டு ஊழியன்!
வீரர்கள்-
சவ பெட்டியில்-
ஊழல்-
"பாரத தீயவர்கள்"!
"தியாகம்" செய்தவர்களை-
மறக்க-
"அத்தீயவர்களை" போலவா!?-
நாம்-
கொடியவர்கள்!,?
(இக்கவிதை அனைத்து வெளிநாட்டு-
ஊழியர்களுக்கு அர்ப்பணம்)
Subscribe to:
Posts (Atom)