Friday 13 April 2012

மயான காடு!

உலகையே-
ஆள நினைத்தவர்கள்!

அடங்கி கிடக்குற-
உலகங்கள்!
-------------------
அலைகிறோமே-
"நான் நான்"-
என்று!

மறந்தோமே-
முடிவு -
"இதுதானென்று"!
-------------------------
மரணத்துக்கு-
"பின்னால்"-
உண்டு-
கருத்து வேறுபாடா!

மரணம் இல்லையென-
சொல்பவன்-
யாரடா!?

தூக்கம்-
சிறு மரணம்!

மரணம்-
பெரும் தூக்கம்!
----------------------

ஆடுனவன்-
அடங்கிட்டான்!

ஆடுகிரவனும்-
அடங்குவான்!

அடங்கியவர்களைஎல்லாம்-
ஆட்டங்கான வைப்பான்!
"ஒருவன்"!
---------------------------
மண்ணை -
ஆண்டவனும்!

மண் வீட்டு காரனும்!

மக்கி போனாங்க!

மனுசங்க ஏங்க-
மறுக்குரோம்ங்க!?
----------------------
சுடு காடு-
ஊழல்!

சவ பெட்டி-
ஊழல்!

இவர்களுக்கும்-
இருக்கு-
நாட்டை ஆளும்-
கனவுகள்!
------------------
பெருகி வரும்-
காணாமல்-
போனவர்கள்!

பெருவாரியாக-
கண்டுபிடிக்கபடுது-
புதை குழிகள்!

இது தான்-
காஷ்மீர் மக்கள்!
---------------------
ஜனனம்-
மரணம்!

இரண்டும்-
அவள் பார்வையின்-
ரணம்!
-------------------
தேவைக்கு அதிகமாக-
கட்டிடங்களை-
கட்டி தொலைக்கிறான்!
-வாழும்போது!

சுமையாக-
சமாதிகளையும்-
எழுப்புறான்!
-செத்த பிறகும்!
--------------------
உயிரோட இருக்கையிலும்-
தீட்டு!

பொணமா போகையிலும்-
விடாத தீட்டு!

தாழ்த்தபட்டவர்களின்-
சடலத்தை-
புழு பூச்சி தின்னும்!

உயர் ஜாதி-
என்பவனே-
உன்னை -
புலி சிங்கமா-
திங்கும்!?
---------------------

22 comments:

  1. தாழ்த்தபட்டவர்களின்-
    சடலத்தை-
    புழு பூச்சி தின்னும்!

    உயர் ஜாதி-
    என்பவனே-
    உன்னை -
    புலி சிங்கமா-
    திங்கும்!?//
    சரியான கேள்வி ....

    ReplyDelete
    Replies
    1. sasikala!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  2. கவிஞருக்கு எனது இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //உலகையே-
    ஆள நினைத்தவர்கள்!

    அடங்கி கிடக்குற-
    உலகங்கள்!//

    மிக சிறந்த வரிகள்

    ReplyDelete
    Replies
    1. avar unmaikal!

      ungal varavukku mikka nantri!

      Delete
  4. உலகையே-
    ஆள நினைத்தவர்கள்!

    அடங்கி கிடக்குற-
    உலகங்கள்!
    >>>
    அங்கு சென்று சில நிமிடங்கள் இருந்தாலே வாழ்வியல் தத்துவம் பலவற்றை அறிந்து கொள்ளலாம். பகிர்வுக்கு நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. raji!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  5. //தூக்கம்-
    சிறு மரணம்!

    மரணம்-
    பெரும் தூக்கம்!//

    ;) அருமை.

    ReplyDelete
  6. கடசில கேட்டான் பாரு கேள்வி ஒன்னு...புடிச்சிருக்கு நண்பா அந்த கேள்வி

    ReplyDelete
  7. //ஆடுனவன்-
    அடங்கிட்டான்!

    ஆடுகிரவனும்-
    அடங்குவான்!

    அடங்கியவர்களைஎல்லாம்-
    ஆட்டங்கான வைப்பான்!
    "ஒருவன்"!//

    சரியான சாட்டை அடி வரிகள்

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!
      ungal varavaal-
      enakku makizhchi!

      Delete
  8. //உயர் ஜாதி-
    என்பவனே-
    உன்னை -
    புலி சிங்கமா-
    திங்கும்!?//

    தக்காளி.....உண்மையிலேயே புரிஞ்சவன்/ புரிஞ்சுகிட்டவன்.....தீண்டாமை பற்றி இனிமேல் பேசுவான்

    ReplyDelete
    Replies
    1. mana saatchi!

      ungal karuthukkum-
      varavukkum nantri!

      Delete
  9. கடைசிப் பந்தி உறைக்குது !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri

      Delete
  10. நிலையில்ல வாழ்கை பற்றி அருமையான கவிதை

    ReplyDelete
  11. Replies
    1. raaja;

      ungal muthal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete
  12. ...தூக்கம்-
    சிறு மரணம்!

    மரணம்-
    பெரும் தூக்கம்!.....

    உண்மையிலும் உண்மை நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. mahenthiran!

      ungal muthal varavukku-
      mikka nantri!

      Delete