Friday 1 February 2013

ஹபீப்-குர்சியத்!(3)

அல்லாஹு அக்பர்-
அல்லாஹு அக்பர்-என்று
பாங்கின் சப்தம்-
கேட்கும்!

நாளின் தொடக்கத்தில்-
கேட்கும் முதல்-
சப்தம் அதுவாகவே-
இருக்கும்!

அக்குரலுக்கு-
சொந்தகாரர்-
மோதினார் மாமா -
அப்துல் ஜப்பார்-
அவர்கள்!

நேரங்கடந்து-
தூங்கினாலும்-
நேரத்தோடு-
எழும்பணும்-என
பழக்கிட்ட-
தத்துவங்கள்!

பெரியவர்கள்-
சிறியவர்கள்-
ஏழைகள்-
பணக்காரர்கள்-
நிற்கும்-
வேறுபாடில்லாத-
வரிசைகள்!

ஆச்சாவின்-
முந்தானையில்-
"முடிந்து" வைத்த-
காசும்!

உம்மாவின்-
சட்டைப்பையில்-
இருக்கும்-
காசும்!

தின்பண்டங்களாக-
மாறும்!

நூஹ் மாமா-
தேநீர் கடையும்!

புஷ்பம்-
முக்குழியும்!

"கஞ்சிக்கார அப்பா"-
சேமியா கஞ்சியும்!

இப்போது நினைத்தாலும்-
நெஞ்சு குழி-
இனிக்கும்!

சிகப்பு-
கொண்டை கொண்ட-
சேவல் குஞ்சிகள் போல-
வெள்ளை தொப்பிகள்-
அணிந்து-
சிறார்கள்-
ஒருபக்கம்!

பச்சை கிளிகள்-
கூட்டம் போல-
கருப்பு ஆடை(பர்தா)-
அணிந்து-
சிறுமிகள்-
மறுபுறம்!

மதரசாவில்-
சல சல வென-
கேட்கும்-
பேச்சின்  சப்தம்!

சப்தங்கள்-
கொஞ்ச கொஞ்சமாக-
குறையும்-
காரணம்-
தூரத்தில்-
கேட்கும்-
ஹசரத்தின் -
காலடி சப்தம்!

(நினைவுகள் சுழலும்.....)

//அல்லாஹு அக்பர்- இறைவன் மிகபெரியவன் என்ற பொருள் கொண்ட-
தொழுகைக்கான அழைப்பு!

மோதினார்- பள்ளிவாசலில் தொழுகைக்கு அழைப்பவர்!

மதரசா-இஸ்லாமிய மார்க்கம்
சொல்லி கொடுக்கப்படும்
இடம்.

முக்குழி-குழிபணியாரம் .

ஆச்சா-பாட்டி.
உம்மா-அம்மா. //////////





4 comments:

  1. அருமையான நினைவுகள்.... நெய்வேலியில் நண்பர் வீட்டில் அருந்திய சேமியா கஞ்சி நினைவுக்கு வந்தது - உங்கள் கவிதை மூலம்.

    ReplyDelete