Monday 29 April 2013

பெண்ணினம்...! (3)

திகைத்தேன்-
விக்கித்தவனாக!

செய்தி தாளில்-
படித்த-
செய்தியோ-
சுடும் தீயாக!

பெற்ற தாயே-
பெண் குழந்தையை-
கழுத்தை நெறித்து-
கொன்றதாக!

வறுமையே-
காரணம்-என
ஏழைத்தாய்-
சொன்னதாக!

நீங்களும்-
நானும்-
பிறக்கும்போதும்!

இன்னும் -
ஏனைய உயிகள்-
உலகிற்கு வரும்போதும்!

கொண்டு வந்தோமா!?-
கொண்டு வந்ததுவா!?-
பணத்தையும்-
சொத்து பத்திரத்தையும்!?

சொல்லுங்கள்-
சொந்தங்களே!

உணருங்கள்-
உறவுகளே!

"வறுமைக்கு-
பயந்து -
உங்கள் குழந்தைகளை-
கொல்லாதீர்கள்-
உங்களுக்கும் -
அவர்களுக்கும்-
நாமே(இறைவன்)-
உணவளிக்கிறோம்-
இறை மறை!

ஏன் விலக-
மறுக்கிறது-
நம் மன-
திரை!

ஒரு வட்டத்திற்குள்தான்-
"படைக்கபட்டவனின்"-
சிந்தனைகள்!

அதற்கும்-
மேலானது-
"படைப்பாளனின்"-
அற்புதங்கள்!

முதியோர்கள்-
அதிகரிப்பதாக-
இளையோர்கள் -
குறைவதாக-
சீனா கவலை-என
ஒரு தகவல்!

இனி-
கள்ளிபாலால்-
கொள்ளி வைத்த-
தமிழக-
தகவல்..!!

(தொடரும்....)



4 comments:

  1. இனியேனும் தவிர்க்கப்படவேண்டும்
    இதுபோன்ற கொடுமைகள்...

    ReplyDelete
  2. தடுக்கப்பட வேண்டிய கொடுமைகள்.......

    ReplyDelete
  3. கொடுமைகள் அகல வேண்டும்! அருமையான தொடர்கவிதைக்கு நன்றி!

    ReplyDelete