Thursday 11 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!! (7)


கற்பழிப்பு-
நடந்தது!

கருவறுப்பு-
நடந்தது !

துண்டு கட்டாக-
தூக்கபட்டார்கள்!

துண்டு,துண்டாக-
வெட்டபட்டார்கள்!

தீக்கிரையான-
சொத்துக்கள்!

சோற்றுக்கே-
கையேந்திய-
முன்னாள்-
"சொத்துக்காரர்கள்"!

ஓட-
ஓட-
விரட்டி!

ரத்தத்தில்-
குளிப்பாட்டி!

கர்ப்பிணி-
வயிற்றை-
கிழிச்சி!

சிசுவை-
எடுத்து-
அடிச்சே-
சாகடிச்சி!

"சுட்டும்-"
செத்தார்கள்!

செத்தும்-
சுடபட்டார்கள்!

குண்டுகளையும்-
பயன்படுத்தினார்கள்!

இவர்களுக்கு-
கொலைகள்-
கை வந்த-
கலைகள்!

அரசியல் சாயம்-
பூசலாம்-
குற்றம்-
சாட்டுபவர்கள்-
அரசியல்வாதி என்றால்!

மத சாயம்-
பூசலாம்-
இதை-
சிறுபான்மை -
சமூக தலைவர்கள்-
சொன்னால்!

செய்தவர்களே-
இதை-
சொன்னால்!!?

ஆம்-
சொன்னது-
செய்தவர்களே-
பெருமிதமாக!

"ஒளி பதிவு-"( வீடியோ பதிவு)
எடுப்பது-
தெரியாதவர்களாக!

ஆனாலும்-
இவர்கள்-
சொல்லுவார்கள்-
தேச பக்தர்கள் என!

கலாசார காவலர்கள்-
என!

உயிரையே-
பயணம் வைத்து-
உண்மையை -
வெளிக்கொண்டுவந்தவர்-
ஆசிஷ் கேதான்!

யார்-
இந்த -
ஆசிஷ் கேதான்!!?

(தொடரும்....)



2 comments:

  1. 'ஆசிஷ் கேதான்' அறிய ஆவலுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. சித்தம் சிதறிவிடும் சித்திரவதைகள் சகோ...:(

    என் தாய்நாட்டிலும் இதே இதேதான் நானறிந்தது.
    வலி ஒன்றேதான்.

    இங்கும் அதேகொடுமை...
    தொடருங்கள்...

    ReplyDelete