Sunday 19 May 2013

பெண்ணினம்...! (22)

கற்பு!
ஆண்கள்-
பெண்ணிடம்-
எதிர்பார்ப்பது!

தன்னை -
தானே-
பரிசோதிக்க-
மறந்தது!

பெண்களிடம் மட்டும்-
கற்பு-
பொக்கிஷமா!?

ஆணிடம் மட்டும்-
"அது"-
தெருவில் கிடக்கும்-
பொருளாகுமா!?

உண்பது-
பாலின -
வேறுபாடென்றால்!

வித்தியாசபடுமோ-
தின்பது-
மலமென்றால்!

ஆண் -
"சேற்றை "கண்டால்-
மிதிப்பானாம்!

ஆற்றை-
கண்டால்-
கழுவுவானாம்!

இப்படியாக-
கிராமங்களில்-
சொல்வாங்க!

அப்படிஎன்றால்-
ஏன்-
விஷத்தை கண்டால்-
குடிக்க மறுக்குறாங்க!?

பண திமிரு!
தேக திமிரு!

இதுவே-
எல்லை மீற-
வைக்குது-
பாரு!

அழகிகள்-
கைதாம்-
செய்திகள்-
சொல்லும்!

"காசு வாங்கி"-
கட்டுபவனை-
ஏன் ஆண்பிள்ளை -என
சமூகம் -
சொல்லுது!?

பாம்பு சாமியார்-
ஆசிரத்தில்-
கைதுகள்-
நடந்தது!

காரணம்-
விபச்சாரம்-
நடந்தது!

கைதான-
பெண்களெல்லாம்-
எப்பேர்ப்பட்டவர்கள்!

எல்லாம்-
பட்டம் படித்தவர்கள்!

காரணம்-
என்ன!?
ஆசை!

பணத்தாசை!

(தொடரும்....)

// சில வருடங்கள் முன்பாக டெல்லியில் நடந்த சம்பவம்.
பாம்பு சாமியார் விவகாரம்//









2 comments:

  1. பண திமிரு...!
    தேக திமிரு...!

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. தகவல்கள் புதிது! கவிதை சிறப்பு! தொடர்கிறேன்! நன்றி!

    ReplyDelete