Wednesday 8 May 2013

பெண்ணினம்..! (12)

வந்தடைந்தாள்-
கடற்கரையை!

முடிக்க-
நினைத்தாள்-
தன்-
கதையை!

சூரியன்-
மறைய-
தொடங்கியது!

கூட்டம்-
குறைய-
தொடங்கியது!

இவளுக்கு-
"மடிய-"
உள்ளம்-
தூண்டியது!

போனாள்-
போனாள்-
அலைகளுக்கிடையில்!

ஆனால்-
ஆனால்-
கடல் நீரை-
குடிக்க தொடங்கினாள்!

காப்பாற்றியது-
சில -
கைகள்!

அதனை-
தொடர்ந்து-
நடந்தேறியது-
சீரழிப்புகள்!

பசியால்-
பலகீனத்தால்!

மயக்கமுற்றாள்!

அவர்கள்-
வெறிக்கு-
இரையானாள்!

இவள்-
கதையை-
கேட்டு முடித்தார்-
முகவர்!

முகவர்-
கேட்டார்-
போலீசிடம்-
போகலையா!?

"கெடுத்ததே-"
போலிஸ்தானய்யா !!

யார்-
இந்த -
முகவர்!

எதற்கு-
முகவர்!

பாலியல்-
தொழிலுக்கு-
முகவர்!

ஆம்-
புரோக்கர்!

அவர்-
ஆட்டோ சங்கர்!!

(தொடரும்...)

//ஆட்டோ சங்கர் மரண வாக்குமூலம் புத்தகத்தை
பற்றி எழுதிய கவிதை-
படிக்கலாம்!

புரட்டினேன்! புரட்டபட்டேன்!!
(1)

(2)







3 comments:

  1. சொல்லிச் செல்லும் விதம் அருமை
    வித்தியாசமான முயற்சி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மேலும் அறிய தொடர்கிறேன்...

    ReplyDelete
  3. சோக நிகழ்வை சொல்லியவிதம் அருமை! தொடருங்கள்!

    ReplyDelete