Wednesday 22 May 2013

பெண்ணினம்..! (25).

தப்பு -
நடப்பதில்-
எல்லோருக்கும்-
கவலை இருக்கு!

ஆனால்-
அதன் வழியை-
அறிய-
நமக்கு-
ஆர்வம்-
இருக்கு!?

பார்ப்போம்-
சில-
வரும்-
வழியை!

நம்முடன்-
கலந்திட்ட-
கொடுமையை!

ஒருபுறம்-
குடிச்சிட்டு-
வண்டி ஓட்டாதே-
அறிவிப்பு பலகை!

எதிர்புறம்-
தெரிவிக்குது-
"பார்கிங் வசதி "உள்ள-
மதுபான கடையை!

வண்டியில-
குடிக்க வருகிறவன்!

குடிச்சிட்டு-
வண்டியை-
தள்ளிகிட்டா-
போவான்!?

"தீபிடிக்க -
தீபிடிக்க...-
பாடலுக்கு-
கெட்ட ஆட்டம்-
ஆடபடுது!

இது-
குடும்பத்தோட-
பார்க்கபடுது!

மனவியலாளர்-
சொல்வது-
கள்ள உறவுக்கு-
தொலைக்காட்சி தொடரே-
காரணம்!

இன்று-
தொடர் பார்க்காத-
வீடு இருப்பது-
அதிசயம்!

இது போலவே-
வாழ்கை துணையை-
இழந்தவர்களை!

ஏற்றுகொள்ள -
முடியாது-
காலமெல்லாம்-
"இப்படியே"-
இருக்க சொல்வதை!

மானுடங்கள்-
உணர்சிகளின்-
வெளி பாடு!

அம்மானுடம்-
உணர்வுகளை-
கட்டு படுத்துவதோ-
பெரும்பாடு!

"முடியும்" என்பவரை-
கட்டாயபடுத்த -
சொல்லவில்லை!

ஆனால்-
மறு மணத்திற்கு-
தடை விதிக்க-
யாருக்கும்-
உரிமையில்லை!

உலகம்-
மறுமணம்-
செய்யும்-
ஆண்களையாவது-
ஏற்றுகொள்கிறது!

பெண்களையோ-
தூற்றுகிறது!

நடக்கிறது-
துணையோடு-
இருப்பவர்களையே-
"நூல் " விடும்-
சதி!

இப்படியானகாலத்தில்-
தனிமையானவர்களின்-
கதி!?

ஆதலால்-
தப்பில்லை-
மறுமணத்தில்!

ஆனாலும்-
யாரையும்-
திணிக்க முடியாது-
மறு மணத்தில்!

இன்னும்-
ஒரு வழி இருக்கு!

அறிந்திட-
நீங்கள் -
பொறுத்திட-
 வேண்டி இருக்கு..!

(தொடரும்...)

3 comments:

  1. நீண்டுடிச்சின்னு நினைக்கறேன் நண்பா...

    ReplyDelete
  2. காத்திருக்கிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அருமை! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete