Thursday 2 May 2013

பெண்ணினம்...!(6)

நாரில்-
கோர்திடனும்-
பூக்கள்-
மாலையாக!

வாயில -
"அள்ளி போடணும்"-
பெண்மக்கள்-
மணமாக!

பணத்திற்கு-
உடன்படுபவள்-
"தப்பானவள்"-என்று
பேரு!

பணத்திற்காக-
மணம் புரிபவனுக்கு -
ஆம்பிள்ளை -என்று
ஏன் பேரு!?

இதிலுள்ளதா!?-
வித்தியாசங்கள்-
வேறு-
வேறு!?

அட-
"கட்டும்போதும்"-
புடுங்குறான்!

"கட்டின "-
பிறகும்-
சீதனம்னு-
புடுங்குறான்!?

எல்லாத்தையும்-
மாமனார் கொடுத்திட்டா-
இவன் எதற்கு-
மானத்தோட-
அலைகிறான்!?

இவன்-
பயணிக்க-
எவனோ-
"வண்டி"-
கொடுக்கனுமா!?

எத்தனையோ-
கொடுமை-
அதை-
 எழுதி முடிக்க-
முடியுமா!?

வாயிற்று பாட்டுக்கே-
கஷ்டப்படும்-
பெண்மக்கள்-
கண்ணீரிலே!

தினமும்-
காயுது-
தனிமை-எனும்
வெப்ப காற்றிலே!

(தொடரும்....)





2 comments:

  1. பணத்திற்கு-
    உடன்படுபவள்-
    "தப்பானவள்"-என்று
    பேரு!

    பணத்திற்காக-
    மணம் புரிபவனுக்கு -
    ஆம்பிள்ளை -என்று
    ஏன் பேரு!?

    super...

    அருமையான கேள்வி.
    (பதில் சொல்ல யாராவது “ஆண்“ இருக்கிறானா...?)

    ReplyDelete
  2. /// எத்தனையோ-
    கொடுமை-
    அதை-
    எழுதி முடிக்க-
    முடியுமா!? ///

    அத்தனை கொடுமை இருக்கு... மாற வேண்டும்... மாறும்... நம்புவோம்...

    ReplyDelete