Tuesday 4 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (19)

குருவிடம்-
மக்கள் பெற்றார்கள்-
ஆசீர்வாதத்தை!

மக்களோ அறியவில்லை-
குரு தலைக்கு மேல்-
கத்தி தொங்குவதை!

விஷ்ணு பட்டர்-
ஆசிர்வாதம் பெற்றார்!

குரு -
விழுங்கவும் முடியாமலும்-
துப்பவும் முடியாமலும்-
தவித்தார்!

பூஜை பொருட்கள் நிரப்பபட்டது!

மந்திரங்கள் ஓதபட்டது!

உணவு கொடுக்க!

உண்டதை எடுக்க!

வழிகள் அமைக்க!

இரு காவலர்கள் நிற்க!

குரு உள்ளிருக்க!

கதவு பூட்டபட்டது!
சாவி கைப்பற்றபட்டது!

மற்றொரு அறை!

விஷ்ணு மற்றும்-
சீடர்களிடம் விசாரணை!

சீடன் ஓலைச்சுவடியை -
கையில் கொடுத்தான்!

மன்னிப்பு வேண்டி காலில் விழுந்தான்!

விஷ்ணுவை-
சேதுபத்திரர்-
கேள்விகளால் துளைத்தார்!

விஷ்ணு அவகாசம் கேட்டார்!

எத்தனை நாட்களும்-
அவகாசம் எடுக்கலாம் பாதாள சிறையில்..!!-
சேதுபத்திர் சொன்னார்!

இழுத்து வர-
காவலர்களுக்கு உத்தரவிட்டார்!

அரசவை கூடியது!

மற்ற அமைச்சர்களுக்கு-
ராஜ குரு ''சாதனைகள்''-
விளக்கபட்டது!

ராஜ குருவிற்கு-
பரிந்துரைக்க யாருமில்லை!

பரிதாபம் படகூடியவர்களும்-
யாருமில்லை!

''நானொன்றும் பதவி ஆசை கொண்டவனில்லை!

நாட்டிற்கு  நன்மை பயக்கவே ஆட்சியில் தொடர வேண்டிய நிலை!

நாங்கள் காட்சி பொருளாக காட்டபடுகிறோம் அரசர்கள்!

அதிகாரம் செலுத்துபவர்களாக இருக்கிறார் மடாதிபதிகள்!

எதிர்த்தாலோ, மறுத்தாலோ காணாபிணமாக்கபடுகிறார்கள்!

பரப்பபடுகிறது ''முக்தி''யடைந்ததாக புரட்டுகள்!

புரட்டுகளையும் தலையாட்டி ஏற்கும் மாக்களாக மக்கள்!

உயர்ந்தவன்,தாழ்ந்தவன் நம் தேசத்தில் கூடாது!

இனியும் அதனை ஏற்க முடியாது!

பாண்டிய நாட்டில் திருஞான சம்பந்தம் எனும் மகான் உள்ளார்!

அவர் சமதர்ம போதனைகளை கற்பிக்கிறார்!

அரபிகள் மகான் முஹம்மது என்பவரும் போதனைகள் செய்கிறார்!

இவைகளை நாம் ஆராய வேண்டும்!''

மன்னர் -
நீண்ட உரையாற்றினார்!

சாதக பாதகங்களை-
கேட்டறிந்தார்!

அரசவை கலைக்கபட்டது!

முக்கிய அமைச்சர்களை-
இருக்கைகள் சுமந்திருந்தது!

சேதுபத்திரர்-
மன்னரிடம் நீட்டினார்-
கைபற்றிய ஓலைச்சுவடியை!

மன்னர் -
படிக்க சொன்னார்-
சேதுபத்திரரையே!

சேதுபத்திரர்!

பிரித்தார்!

பார்த்தார்!

அதிர்ந்தார்!!

(தொடரும்....!!)

5 comments:

  1. அதிர்ச்சியுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete
  2. இப்படி சஸ்பென்சில் விட்டு விட்டீர்களே அருமை.சீனி

    ReplyDelete
  3. மன்னரின் உரை மிக அருமை...

    என்ன செய்தியோ ஓலையில்....!?

    ReplyDelete
  4. நானும் அதிர்ச்சியுடன் தொடர்கிறேன்...

    ReplyDelete