Monday 17 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (32)

மன்னர் கூறலானார்!

''ஒவ்வொருவருக்கும்-
வெவ்வேறு மனமுண்டு!

அம்மனங்களில்-
வெவ்வேறு விருப்பங்களுமுண்டு!

முன்னரே-
பல ஜாதி பிரிவுகள் இங்குண்டு!

இன்னொன்று கூடுதலானால்-
தவறெதுவும் உண்டு!?

விரும்புபவர்கள்-
இஸ்லாத்தில் இணைவதில் -
தடையேதும் இல்லை!

மற்றவர்களை -
தொல்லைக்கு உள்ளாக்க-
அனுமதி இல்லை!''

தீர்ப்பு இப்படியாக-
முடிவுற்றது!

வாழ்த்தொலிகள்-
அரண்மனையெங்கும் எதிரொலித்தது!

சேர நாடெங்கும்-
செய்தி பரவியது!

தலைநகர் வருவொரெல்லாம்-
அரபிகளை கண்டு செல்வது வாடிக்கையானது!

அரபிக்கள்!
கண்காட்சி பொருளானார்கள்!

மன்னரும்-
சேதுபத்திரரும்-
தளபதியாரும்-
நபிகள் நாயக்தைப்பற்றி கேட்டறிந்தார்கள்!

அத்ஹம் திருமணம் ஆனவர்!
கப்பலை திரும்ப கொண்டு செல்ல-
பொறுப்பேற்றவர்!

சேதுபத்திரர் -
புத்திரியை மணந்திட இயலாதவரானார்!

தன் வலது கரம்போன்ற -
நண்பனை சிபாரித்தார்!

அரபிக்களுக்கு-
வர்த்தக அழைப்பு!

அது-
பாண்டிய நாட்டுடைய அழைப்பு!

பாண்டிய நாட்டை நோக்கி-
அத்ஹம்!
அர்க்கம்!
உத்பா!
மேலும் சிலர்!

பாதுகாப்பிற்கு-
காவலர்களையும் அனுப்பினார்!-
மன்னர்!

நாட்கள் கழிந்தது!

அரபிக்கள் திரும்பியதாக-
செய்தியும் வந்தது!

அத்ஹமிடம்-
மன்னர் சேரமான் பெருமாள்-
வினவினார்!

''அரசே!
பாண்டிய மன்னர் மகா வீர பாண்டியர்!

குதிரை படையமைக்க-
ஐந்து அரபி இராவுத்தர்களை கேட்டார்!

கப்பற்படையமைக்க-
பத்து''மரக்கலராயர்கள்''ஐ கேட்டார்!

திருமணம் விவகாரம்!
சேர நாட்டையே பின்பற்றபடும்!-என்றார்!
இப்படியாக அத்ஹம் முடித்தார்!

மன்னர் மகிழ்ந்தார்!

''முதல் சம்பந்தகாரர்கள்-
சேர நாட்டுக்காரர்கள்!-என
சொல்லி சிரித்தார் மன்னர்!

நாடே விழாக்கோலம் பூண்டது!
திருமண நாளும் வந்தது!

(தொடரும்...!!)

குறிப்பு;
/இரவி-என்றால் குதிரையாகும் .குதிரை பயிற்றுவிப்பாளர்களே இராவுத்தர் என அழைக்கபட்டார்கள்.

மரக்கலராயர்-என்பதுதான் மறுவி ''மரைக்காயர்''என அழைக்கபடுகிறது.

இராவுத்தர்-மரைக்காயர் இப்பெயர்கள் இன்றும் தமிழ் பேசும் முஸ்லிம்களிடம் இருப்பதை அறிவோம்.//





4 comments:

  1. அத்ஹம் சரியாகச் சொன்னார்...!

    ReplyDelete
  2. வியக்கவைக்கும் வரலாறு..

    ReplyDelete
  3. இராவுத்தர் - மரைக்காயர் - பெயர்க்காரணங்கள் தெரிந்தது....

    தொடர்கிறேன்.

    ReplyDelete