Wednesday 19 February 2014

மூன்றாம் சேர மன்னன் !! (34)

மன்னரின் எண்ணங்கள்-
எழுத்துகளானது!

அவ்வெழுத்துக்களை-
சேதுபத்திரர் குரல்-
மக்களை நோக்கி ஒலித்தது!

''என் தேச மக்களே!
என் சுவாசங்களே!

நாளை அதிகாலை-
அரபுக்கள் கப்பல் கிளம்புகிறது!

அதனுடன்-
என் ஆன்மீக தேடலும் தொடர்கிறது!

முஸ்லிம்கள் தலைவர்-
''முஹம்மது''அவர்களை காண செல்கிறேன்!

''சத்தியத்தை'' தேடி செல்கிறேன்!

மன்னராக இனி-
மார்த்தாண்ட வர்மர் இருப்பார்!

நல்லாட்சி தருவார்!

முடிந்தவர்கள்-
அதிகாலை கடற்கரை வாருங்கள்!

படித்து முடிக்கபட்டது-
மடலது!

வேதனை தாங்கிடாது அழுதது -
மக்கள் மனமானது!

''மறு பரிசீலனை கூடாதா..!?''-
கதறி துடித்தது -
பிரதானி ஒருவரது குரலானது!

அதனையே-
மக்கள் வெள்ளமும் ஆர்ப்பரித்தது!

மன்னர் கை கூப்பி-
''மன்னித்து விடுங்கள்''-
என்றார்!

மக்களோ-
மலையே தலை தாழ்ந்ததாக எண்ணி-
விக்கித்தார்கள்!

அதிகாலை நேரம்!

கடற்கரையோரம்!

கண்ணீரும் கம்பலையுமாக-
மக்கள்!

மக்களின் மனதை சொல்லியது-
''ஓ...ஓ..''என சப்தமிட்டு கடல்!

கடலில் கப்பல் தள்ளாடியது!

ஜனங்களுக்கிடையே-
மன்னரின் பல்லாக்கு -
தவழ்ந்து வந்தது!

''அல்லாஹு அக்பர்!
அல்லாஹு அக்பர்!-
கப்பலில் பாங்கு சப்தம்!

மன்னரின் வாழ்த்து என-
மக்களும் சொன்னதால்-
கரையெங்கும் எதிரொலித்தது-
அச்சப்தம்!

மன்னரின் பல்லாக்கை-
மக்கள் பார்த்தார்கள்!

அரபிக்களுடன்-
புது மாப்பிள்ளைகளும்-
இணைந்து தொழுதார்கள்!

வந்துவிட்டது-
பல்லாக்கு!

அரபிக்களுக்கோ-
வியப்பு!

பல்லாக்கு தூக்கிகளானவர்கள்!

மன்னர் மார்த்தாண்ட வர்மர்!
சேதுபத்திரர்!
மார்த்தாண்ட பூபதி -தளபதியார்!
சிங்கராயர்!

மன்னருக்கு-
அரபிக்கள் மரியாதை செய்தனர்!

கப்பலுக்கு அழைத்து சென்றனர்!

நங்கூரம் விலக்கப்பட்டது!

கப்பல் நகர்ந்தது!

கப்பிலிலுள்ளவர்களுக்கு-
கரை கறைந்தது!

கரையிலிருந்தவர்களுக்கு-
கப்பல் மறைந்தது!

(தொடரும்...!!)

5 comments:

  1. அட மன்னர் அங்கப் போயிட்டாரா..திரும்பி வருவாரா?

    ReplyDelete
  2. கதை வேறு விதமாக... சுவாரஸ்யமாக செல்கிறது...

    ReplyDelete
  3. இன்று : http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Angry.html

    ReplyDelete
  4. மன்னரின் பயணம் என்ன ஆனது! சுவாரஸ்யமுடன்!

    ReplyDelete
  5. அடுத்தது என்ன என்ற ஆர்வத்துடன் தொடர்கிறேன்.

    ReplyDelete