Monday 16 April 2012

வாழ்த்துக்கள்!

மக்களை மடிய -
செய்து-
மக்களாட்சிக்குனு-
சொல்றவங்களுக்கு!

அணு உலைகளை-
வச்சிக்கிட்டு-
அணு ஆபத்தை -
பேசுறவங்களுக்கு!

"நம்பி" வந்தவளையும்-
நடிக்க வந்தவளையும்-
சுழற்றி அடித்த நடன-
"புயலுக்கு"!

"வம்பால "-
வீதிக்கு வந்தும்-
புத்தி படிக்காம-
"புயலிடம்" மாட்டிய-
"தாரா"லமயமானவளுக்கு!

அன்று-

அல்வா-
நெல்லை!

இன்று-
"உலை"-
நெல்லை!

விஷயம் தெரிந்தவங்க-
மௌனமா இருந்தவங்களுக்கு!

விசமென-
தெரிந்த பின்னும்-
வாயை மூடி-
இருப்பவர்களுக்கு!

இந்தோனேசியாவில்-
நில நடுக்கம்!

ஆபத்து இல்லையாம்-
இந்தியாவில் உள்ள கூடன்குள-
உலைக்கு-
பொய்யை தரும்-
தின மலத்துக்கு!

சுய மரியாதை-
அண்ணா!-
பேரை வைத்துள்ள கட்சி-!
மானம் மரியாதை இல்லாமல்-
காலில் விழும்-
அமைச்சர்களுக்கு!

பக்கத்துக்கு வீட்டுல-
பசியில கிடக்குறத-
கவனிக்காம-
புண்ணியம் எனும் பேர்ல
கூட்டி போன சொந்தகாரனுக்கு-
ஆக்கி போடுறவனுக்கு!

ஸ்பைணுல இன சுத்தி கரிப்பு-
செய்ய பட்ட நாள் தான்-
ஏப்ரல் ஒன்னு!

அதைதான் சொல்றான்-
முட்டாள் தினம்னு!

இந்த வரலாறு- தெரியாம
பத்தோட பதினொன்னா-
கொண்டாடுபவனுக்கு!

அதென்ன ?-
ஒரு நாள் மட்டும்-
முட்டாள் தினம்!

அலங்கோல உலக-
நடப்பால்-
ஒவ்வொரு நிமிடமும்-
முட்டாள் நிமிடம்தான்!

12 comments:

  1. //ஒவ்வொரு நிமிடமும்-
    முட்டாள் நிமிடம்தான்! //

    மனசாட்சி எல்லா நாளுன்னு சொல்லுச்சி - நீர் நிமிடம் என்று முடிப்பதற்கு முன் கூறிய வரிகளில்... ஆம் முட்டாள் நிமிடமே.

    சிந்திக்க வேண்டிய வைர வரிகள்

    ReplyDelete
    Replies
    1. mana saatchii

      ungal karithukku varavukkum-
      aaatharavukkum mikka nantri!

      Delete
  2. சுய மரியாதை-
    அண்ணா!-
    பேரை வைத்துள்ள கட்சி-!
    மானம் மரியாதை இல்லாமல்-
    காலில் விழும்-
    அமைச்சர்களுக்கு!
    சவுக்கடி கொடுக்கும் வார்த்தைகள் அருமை .

    ReplyDelete
    Replies
    1. sasikalaa!

      ungalukku enathu-
      manamaarntha nantrikal!

      Delete
  3. என்ன செய்ய நண்பரே..
    கண்ணிருந்தும் பார்க்காமல்
    காதிருந்தும் கேட்காமல் ..
    போய்க்கொண்டிருக்கிறோம்...

    ReplyDelete
    Replies
    1. mahenthiran!

      ungal karuthukkum
      varavukkum nantri!

      Delete
  4. விழித்துக்கொண்டே உறங்கினால்?!அதுதான் நடக்கிறது

    ReplyDelete
  5. //மக்களை மடிய -
    செய்து-
    மக்களாட்சிக்குனு-
    சொல்றவங்களுக்கு// காலம் காலமாய் இதுதான் நடக்கிறது நண்பா..! வேதனை வரிகள்..!

    ReplyDelete
    Replies
    1. yov!

      ungal muthal varavukku-
      mikka nantri !

      Delete
  6. இப்பிடி ஒரு வாழ்த்தை இங்க சம்பந்தப்பட்ட யாருமே நினைச்சும் பாத்திருக்கமாட்டாங்க !

    ReplyDelete
    Replies
    1. hemaa!

      ungal varavukkum-
      karuthukkum mikka nantri!

      Delete