Friday 30 November 2012

வெளிச்சங்கள்"! (4)

சொல்வார்கள்-
யானை வரும்-
பின்னே!

மணி ஓசை வரும்-
முன்னே!

அதுபோலவே-
நாட்டின் விழா-
நாட்கள்-
வரும் பின்னே!

பரபரப்பு-
செய்திகள்-
வரும்-
முன்னே!

தியாகிகளை-
நினைக்க வேண்டிய-
நாட்கள் அது!

திகிலான -
நாளாக -
பார்க்கபடுகிறது!

செய்திகள்-
தீயாக-
பரவும்!

பிறகு-
சில பல-
பேர்களின்-
வாழ்வு-
கேள்வி குறிகளாகும்!

"ஊடுருவி-"
விட்டார்கள்!

இதோ-
வந்து விட்டார்கள்!

பக்கத்து-
தெருவை-
தாண்டி விட்டார்கள்!

என்பதாகவெல்லாம்-
"சப்பை"-
கட்டுவார்கள்!

"கொடூரமானவர்களை"-
கையும் களவுமாக-
பிடிக்கணும்!

தவறு உறுதி என்றால்-
தண்டித்தே ஆகணும்!

இதில்-
மாற்று கருத்தில்லை!

அச்செய்திகள்-
வெளியிடுவதால்-
தப்பு செய்ய முயல்பவர்கள்-
திட்டத்தை -
மாற்ற வாய்ப்பில்லை-என
சொல்வதற்கில்லை!

மற்ற சமூகத்தினர்கள்-
ஒரு சமூகத்தின்-
மேல்-
வெறுப்புகொள்ள-
வழி செய்யாது-என
சொல்வதற்கில்லை!

என்னென்னமோ-
பெயர்கள் கொண்ட-
அமைப்புகளாம்!

எங்கிருந்து-
"இவர்கள்"-
வருகிறார்களாம்! ?

அப்பாவிகளை-
கொல்ல எவன்-
அனுமதிதானாம்!?

பதவி பவுசு-
கொண்டவனாக-
இருந்தாலும்-
சரி!

பஞ்ச பரதேசியாக-
இருந்தாலும்-
சரி!

அப்பாவி மக்களை-
கொல்ல அனுமதிக்கவில்லை-
மார்க்கம்-என்பதே-
சரி!

பரபரப்பு-
செய்திகளில்-
உண்மை இருக்குமா!?-
கேள்வி குறி!

திருச்சியில்-
அமைச்சராக பொறுப்பேற்று-
சில தினங்களில்-
விபத்தில்-
மரணமடைந்தார்-
மரியம் பிச்சை-
அவர்கள்!

வாகன-
ஓட்டுனரை-
சில தினங்கள்-
"கழித்துதான்-"
காவல்துறை-
கைது செய்தார்கள்!

அப்படியெல்லாம்-
இருக்கும்பொழுது!

ஒரு -
அசம்பாவிதம்-
நடக்கும்போது!

உடனடியாக-
சில நபர்கள்-
படங்கள்-
அமைப்புகள்-
பெயர்கள்-
செய்திகளில்-
வெளியிடும்போது!

எப்படி-
சந்தேகம்-
இல்லாமல்-
இருப்பது!?

சொல்லபடுது!

மின்னஞ்சல்-
வந்தது!

குறுஞ்செய்தி-
வந்தது!

ஒரு சமூக தளத்தில்-
எண்பது மில்லியன்-
போலி கணக்காளர்கள்-
இருப்பதாக-
ஒரு ஆய்வு-
சொல்லுது!

இப்படியெல்லாம்-
வேடிக்கைகள்-
இருக்கும்போது!

மக்களும்-
யோசிக்காமல்-
எப்படி-
நம்புவது!?

அல்லது!

"இவர்களிடம்"-
சொல்லி விட்டு-
"அவர்கள்"-
வருகிறார்களா!?

"அவர்களே"-
"இவர்களை"-
அனுப்புகிறார்களா!?

நடுநிலையானவர்களே!?

சந்தேகம்-
வருதுங்களா!?

இல்லைங்களா!?

(குமுறல்கள் தொடரும்...)











4 comments:

  1. சந்தேகம் வருகிறது-இந்த நாடு உருப்படுமா...?

    ReplyDelete
  2. பெரிய பதிவொன்றில் சொல்லவேண்டிய விடயங்கள் அழகாக சுருக்கமாக புரியும் படி செதுக்கியிருக்கிறீர்கள் நண்பா

    ReplyDelete