Sunday 4 November 2012

சிறப்பு நிகழ்சிகள்!

கடைசி வரை-
கலை சேவை-
செய்வேன்!-என
பேட்டிகள்!

பின் திரையில்-
"அவர்"-
ஒவ்வொரு உடையாக-
காற்றில் விடும்-
காட்சிகள்!

இப்படிதான்-
தொலைகாட்சியில்-
சுதந்திர தின-
சிறப்பு காட்சிகள்!

நாட்டில்-
உணவுக்குதான்-
பஞ்சம்!

பண வரவால்-
"இவர்களுக்கு"-
ஆடையில்-
பஞ்சம்!

தியாகத்தை-
பேசுபவர்களுக்குமா!?-
நாட்டில்-
பஞ்சம்..!?


13 comments:

  1. ஒப்பீடு அருமை
    இறுதி பத்தியில் எழுப்பியுள்ள கேள்வி அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இவையெல்லாம் பார்ப்பது இல்லை...

    முடிவில் நல்ல கேள்வி...

    ReplyDelete
  3. நச்சுன்னு ஒரு கேள்வி கேட்டிருக்கீங்க.. சீனி.
    சுதந்திர தினத்தில் நடிகைகளை அழைத்து
    பேட்டி எடுக்கிறார்களே அவர்களுக்கும் சுதந்திரத்துக்கும்
    என்ன சம்பந்தம் என்று நீண்ட நாட்களாக எனக்கு விளங்காமல் இருந்தது
    இப்போதுதான் புரிகிறது..
    ஆடைகளை அவிழ்த்துப் போடும் சுதந்திரத்திற்கு
    அவர்கள்தானே அச்சாணி?

    ReplyDelete
  4. உங்கள் பதிவை பார்த்தாவது இனி எல்லா சேனல்களும் அவங்க முடிவை மாற்றி கொள்ளும் என் நம்புவோம்.....

    நன்றி,
    மலர்
    http://www.tamilcomedyworld.com/

    ReplyDelete
  5. இப்படிதான்-
    தொலைகாட்சியில்-
    சுதந்திர தின-
    சிறப்பு காட்சிகள்!
    >>
    சில சமயம் இதுக்குத்தானா சுதந்திரம் வாங்கி தந்தாங்கன்னு நினைக்கத்தோணும் அளவிற்கு இருக்கு இவங்க நிகழ்ச்சிகள்

    ReplyDelete
  6. சூடா ஒரு கேள்வி....

    புரிவது தான் இல்லை.... இவர்களது செயல்.

    ReplyDelete
  7. சுடவே செய்தது கேள்வி.

    ReplyDelete