Monday 15 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!(10)

இந்தியாவிலேயே-
குஜராத்-
சிறந்த மாநிலம்!

சொல்லுது-
ஊடகம்!

மோடி-
நல்லவரு!

அவரு-
வல்லவரு!

அதனால்தான்-
தொடர்ந்து-
முதல்வராக-
பதவி-
வகிக்கிறார்!

இப்படி-
ஒரு சாரார்!

அதிகாரத்தில்-
இருப்பதால்!

நல்லது-
நடக்குது-
சொல்வோமானால்!

சில எதார்த்தங்கள்-
இருக்குது-
கேள்விகளாக-
நமக்கு-
முன்னால்!

ஒபாமா-
அதிபாராக-
நீடிப்பதால்!

அமெரிக்கா-
போர் விமானங்கள்-
பூக்களை தூவுகிறது-
சொல்வோமானால்!

ராஜபக்சே-
அதிபராக -
நீடிப்பதால்!

முள்ளி வாய்க்காலில்-
முல்லை மலர்களை-
கொட்டினார்கள்-என
சொல்வோமானால்!

எகிப்து-
ஹோஸ்னி முபாரக்-
நல்லவரானால்!

அந்நாட்டு மக்கள்-
புரட்சி -
தப்பென்று -
வாதிடுவோமானால்!

நம் நாட்டில்-
காங்கிரஸ் -
"இருந்ததால்-
"இருப்பதால்"-
நடக்கிறதா-
நல்லாட்சி!?

ஆமாம்-
என்றால்-
நாசமா போச்சி!

மூன்றாவது-
அணியால்-
ஓட்டுகள்-
பிரிஞ்சி!

பி.ஜே.பி-
வந்திடுமோ-என
நினச்சி!

காங்கிரசுக்கு-
ஓட்டுக்கள்-
விழுந்துச்சி!

இப்படியாகவே-
பரவலாக-
பேச்சுக்கள்-
அடிபட்டுச்சி!

அதுதான்-
உண்மையாகவும்-
இருந்துச்சி!

(தொடரும்....)






3 comments:

  1. அமைதி நாசாமாப் போச்சு இராஜபக்ஸ வருகையால் தொடருங்கள் கவிதையை சகோ!

    ReplyDelete
  2. சுவாசத்தை நாறடிக்க அரசியலே போதுமே...

    ReplyDelete