Sunday 7 April 2013

நினைவெல்லாம் ரத்தம்! சுவாசமெல்லாம் நாற்றம்!!(3)

அம்மக்கள்-
தேச துரோகம்-
செய்தார்களா!?

சட்டத்திற்கு-
சதி செய்தார்களா!?

போராட்டம்-
நடத்தி-
வன்முறை-
செய்தவர்களா!?

தனி நாடு-
கேட்டவர்களா!?

ஆயுதம் தரித்து-
சேதாரம்-
செய்தவர்களா!?

எல்லை-
 தாண்டிவந்து-
தங்கி-
கொள்ளையடித்தவர்களா!?

சிறப்பு சலுகை-
கேட்டவர்களா!?

இல்லை-
இல்லை!

சத்தியமாக-
இதில் ஒன்றும்-
இல்லை!

நம் இந்திய தேசத்தில்-
சிறுபான்மைகள்-(முஸ்லிம்கள்)
அவர்கள்!

எங்கே-
அவர்கள்!?

"டெல்லி சம்பவத்தில்-"
துள்ளி குதித்தவர்கள்!

இங்கே-
பல "பேருந்து அவமானம்"-
நடந்தபோது-
எங்கே போனீர்கள்!?

போராட்ட உணர்வுகள்-
இருக்கட்டும்-
உண்மையானதாக!

இல்லைஎன்றால்-
போலி வேசம்போட-
பயன்படுத்தாமல்-
இருப்பீர்களாக!

நடந்தது-
குஜராத்தில்!

படித்தது-
"குஜராத்"-எனும்
புத்தகத்தில்!

அதனை-
தொடர்ந்த-
சில உண்மைகளை-
உங்களுக்கு சொல்கிறேன்!

இல்லை-
நினைவூட்டுகிறேன்!

(தொடரும்....!)

//புத்தகத்தின் பெயர்-குஜராத்!

கிடைக்கும் இடம்-
இலக்கிய சோலை,
26,பேரக்ஸ் சாலை,
பெரியமேடு ,சென்னை-03
தொலைபேசி -+91 44-256 10 969
செல்;99408 38051//



3 comments:

  1. ம்.. வலிமிகுந்த கவிதான் சகோதரரே...

    எம்நாட்டில் ஒருவிதம். உங்கள் நாட்டில் இன்னோர்விதம். மொத்தத்தில் கொடுமை கொடுமைதான். யாருக்கும் இப்படியான சூழல்கள் ஏற்படக்கூடாது.
    பேச முடியவில்லை. வலிக்கிறது....:(

    ReplyDelete
  2. வரிகள் - வலிகள்...

    நல்லதொரு புத்தக அறிமுகத்திற்கு நன்றி...

    ReplyDelete
  3. இப்படியும் நடந்ததா ? ஆச்சரியம். வேதனை.

    ReplyDelete