Monday 6 May 2013

பெண்ணினம்...!(10 )

"நம்பி வந்தேனே-
உன்னையே!

விட்டு வந்தேனே-
சொந்தங்களையே!

அணைக்க தெரிந்து-
உனக்கு!

இரக்கம்-
இல்லையா-
உன் மனதிற்கு!?

தொட்டு-
தொட்டு-
"துண்டாடினாய்"!

வயிறு-
"முட்டுது"-
விலகுகிறாய்!

நான்-
எங்கே-
செல்ல!

யாரிடம்-
சொல்ல!

வடிகிறது-
அவளிடம்-
கண்ணீரும்!

கரையவில்லை -
அவனும்"
----------------
அவள்-
நீதானே-
முதல்ல-
"தொட்டே"!

அவன்-
நீயேன்-!?
"சும்மா"-
நின்டே!?

அருகில்-
இருந்தவள்-
இதெல்லாம்-
சகஜம்பா!

உங்களுக்கு-
நடந்தால்-
உங்க மனம்-
பொறுக்குமா!?

யாரடி-
சொன்னே-
ஓங்குகிறான்-
கைய!

அவள்-
தொடர்கிறாள்-
அழுகையை!
----------------
இரு சம்பவமும்-
காதல் பேரை-
சொல்லி நடந்த-
காமம்!

இதில்-
யார்-
பாவம்!?

ஆணா!?
பெண்ணா!?

"சுமை-"
யாருக்கு!?

கேவலம்-
யாருக்கு!?

ஓ!
பெண்ணினமே-
காதல் பெயரால்-
கசக்கி எறியபடுகிறீர்கள் !

கவனம்-
"காவாளித்தனம்-"
நடத்திட-
கயவர்கள்-
கவனமாக-
இருக்கிறார்கள்!

இன்னொன்றை-
சொல்கிறேன்!

அதிர்வீர்கள்-
உத்திரவாதமாக-
சொல்கிறேன்..!

(தொடரும்....)

// z தமிழ் எனும் தொலைகாட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை"நிகழ்ச்சியில் நடந்த சம்பவங்கள்.தற்போதுதான் நான்
முக நூல் வாயிலாக பார்த்தேன்.
இரு சம்பவமும் பெண்ணை ஏமாற்றிய சம்பவம்.
அதனை கவிதையாகவே நான் தந்தது//






2 comments:

  1. /// காதல் பெயரால்-
    கசக்கி எறியபடுகிறீர்கள் ! ///

    தொடருங்கள்...

    ReplyDelete
  2. அவள்-
    நீதானே-
    முதல்ல-
    "தொட்டே"!

    அவன்-
    நீயேன்-!?
    "சும்மா"-
    நின்டே!?

    எதார்த்த வார்த்தைகள்! அருமை.

    ReplyDelete