Wednesday 1 May 2013

பெண்ணினம்..!(5)

உசிலம்பட்டியில்-
நடந்த-
பெண் சிசு கொலையால்!

அன்றைய-
ஆண்டுகாலங்களில்-
பிறந்த ஆண்கள்-
வாடுகிறார்கள்-
தனிமையால்!

பிற ஊர் மக்களுக்கு-
பெண் கொடுக்க-
தயக்கம்!

உள்ளூர் மக்களுக்கோ-
மன இறுக்கம்!

எல்லாம் செஞ்ச-
"பாவம்யா"-என!

வரதட்சணை-
பிரச்சனைதான்-
கொல்ல காரணம் -
என!

சொன்னது-
முதியவர்-
மூதாட்டி!

பத்திரிக்கை-
கண்டது-
இவர்களிடம்-
பேட்டி!

என் -
மனதில்பட்டது!

இவ்வூர் மட்டும்-
இருக்காது!

இம்மக்கள்-
வெளியில் -
தெரிந்துள்ளார்கள்!

வெளியில-
தெரியாமல்-
எத்தனையோ-
பேர்கள்-
"செய்திருப்பார்கள்!"

இதில்-
விளங்கியது-
சில விஷயங்கள்!

அதில்-
ஒன்று-
வரதட்சணைகள்!

ஆம்-
வரதட்சணைகளால்-
எவ்வளவு-
பிரச்சனைகள்!!?

(தொடரும்....)

//உசிலம்பட்டி தகவல்-
நன்றி - நக்கீரன் வார இதழ்//





5 comments:

  1. வரதட்சணை....
    சல்லிவேர்கள் விட்டு பரவி நிற்கும்
    மாபெரும் விஷ விருட்சம்...
    வேரோடு அழித்தால்...
    பெண்ணினம் காக்கப்படும்
    என்பது உறுதியே...

    ReplyDelete
  2. இந்தக் கொடுமை என்று முற்றிலும் மாறப் போகிறதோ...?

    ReplyDelete
  3. கொடுமையான விசயம் பெண்சிசுக் கொலையும் வரதட்சணையும்! என்றுதான் மாறுமோ இந்த அவலம்?

    ReplyDelete
  4. கொடுமைகளுக்கு என்று தான் விடிவுகாலமோ....

    ReplyDelete
  5. varathattchanai .............. india laa than intha kodumai laam nu ninaiken..kavithai arumai .

    ReplyDelete