Thursday 10 October 2013

திருவோடு.....!!

உச்சந்தலையில்-
தொடங்கி!

நெஞ்சுகுழிவரை-
இறங்கி!

இன்னும் கிடைக்கும் -
இடமெல்லாம்-
"செதுக்கி"!

உள்ளங்கால்வரை-
உள்ளடக்கி!

வெட்டி-
சிதைத்து!

சின்னாபின்னமாக்கி-
வைத்து!

அனாதை-
பிணமாக்குவார்கள்!

பிணமாவதால்-
பலர்-
அனாதையாவார்கள்!

தடுத்திருக்கலாம்!

வேடிக்கையே -
பார்க்கிறது-
"அதிகாரங்கலெல்லாம்"!

திருவோடை வைத்து-
பிச்சை எடுப்போரை-
பார்த்திருப்போம்!

திருவோடு கிடைத்ததால்-
பிச்சை எடுப்போரை-
கண்டிருப்போம்!?

இங்கே-
ஒட்டு பிச்சைக்கு-
பிணங்களை-
பயன்படுத்துகிறார்கள்!

பிச்சையெடுக்கவும்-
பிணங்கள் -
விழ செய்கிறார்கள்!



6 comments:

  1. பணமென்றால்
    பிணமும் வாய் திறக்கும் என்பார்கள்..
    பிணத்தை வைத்து
    பணம் செய்வோரும்
    இருக்கத்தான் செய்கிறார்கள்..
    சாட்டையடி வரிகள் நண்பரே...

    ReplyDelete
  2. அவல நிலையை
    அழுத்தமாக அருமையாகச் சொன்னீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. சமுதாய அவலம்! அருமையான கவிதை! நன்றி!

    ReplyDelete
  4. நெஞ்சம் பதைத்தது அவலத்தின் வரிகள் பார்த்து.
    அழகாகக் கவி படைக்கிறீர்கள், நன்றி!

    ReplyDelete